politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

24.8.11

வரும் ஆனா வராது..

அன்றாடம் எதோ ஒரு ஊடகத்திலோ நாள்காட்டியிலோ தவறாமல் ஒலிபரப்பப் படுவதில் ஒன்றாக ஜோதிடமும் உள்ளது... நம் வாழ்க்கை என்பது ஏற்கனவே எழுதி வைக்கப் பட்டது என்று பரப்பப் பட்டு வருகிறது... இவர்கள் சொல்வது போல் அனைத்தும் ஏற்கனவே விதிக்கப் பட்டதா, விதி என்று ஒன்று உள்ளதா? இது தான் இன்றைய தலைப்பு...

ஊழ் என்ற தலைப்பில் திருவள்ளுவரே எழுதி வைத்து விட்டு சென்றுள்ளார் என்று திருவள்ளுவரையும் சித்தர்களில் ஒருவராக்கி தங்கள் ஜோதிடத்துக்கு மரியாதை தேடுகின்றனர் சிலர்.. திருக்குறளின் உண்மையான அர்த்தம் என்ன என்பது திருவள்ளுவரே வந்து சொன்னால் தான் உண்டு... மஞ்சள் கண்ணாடி போட்டுக் கொண்டு படித்தால் மஞ்சளாகவே தெரியும் திருக்குறள்.. அதே போல் தான் பச்சை கண்ணாடி போட்டு படித்தாலும்.. கடவுள் உண்டு என்று திருக்குறள் சொல்வதாக பரிமேலழகர் கூறினால், இல்லை என்று எழுத கலைஞரால் முடியும் என்னும் பொழுது எது உண்மை என்பது ஊழ் தலைப்பிலும் பார்க்கலாம்.. அவர் விதி என்று கூறியது அந்த கால கட்டங்களில் இருந்த அரசாட்சியின் சட்ட விதிகள் குறித்தா என்பது தெளிவாக தெரிய நமக்கு அந்த கால கட்டங்கள் குறித்த வரலாறு பார்வை போதுமானதாக இல்லை... 

தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு தனக்கு தேவையற்ற பாகத்தை மறைத்து விடுவதால் நியாயமாக தோன்றும் சந்தேகங்கள் தனக்கு உண்டான பதில் கிடைக்காமல் அனாதையாக திரிகின்றன... 

அனைத்து ஜோசியர்களும் வாழ்க்கை குறித்த அனைத்தும் ஏற்கனவே எழுதப் பட்டிருக்கிறது என்று கூறிவிட்டு அதை மாற்ற பரிகாரம் செய்யலாம் என்று கூறுவது அவர்களின் முதலுக்கே ஆப்பு அடிக்கிறது...

எல்லாமே ஏற்கனவே திட்டமிடப்பட்டவை என்று எதிர்காலத்தை நோக்கி கூறுவது, செய்யும் தவறுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் போக்கு... 

எல்லாமே ஏற்கனவே திட்டமிடப்பட்டவை என்றால் அதை கேள்வி கேட்க முடியாது... அதை மாற்ற முடியாது.. அப்படி மாற்றினால் அதுவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்... கடவுளால் மாற்ற முடியும் என்றால் அதுவும் ஏற்கனவே திட்டமிடப் பட்டிருக்க வேண்டும்.. ஏற்கனவே எழுதிய விதியை மாற்ற முடியாது என்றால் கடவுள் காணாமல் போய் விடுகிறார்... ஆனால் மிகவும் சாமர்த்தியமாக கடவுள் விதியை மாற்ற முடியும் என்று கூறுவதன் மூலம் ஏற்கனவே அனைத்தும் திட்டமிடப் பட்டவை தான் என்பது வாதத்துக்குள் வர மறுக்கிறது... இதை புரிந்து கொள்ள யாரும் விளக்கி சொல்ல முடியாது ஒவ்வொருவரும் யோசித்தால் ஒழிய இந்த வாதம் விதண்டாவாதமாக வளர்ந்து கொண்டு தான் இருக்க போகிறது...

சரி, அப்படி எல்லாமே திட்டமிடப் பட்டவை இல்லை என்றால் நம் உலகில் நடக்கும் காரண காரியங்களின் காரணம் என்ன? என்று கேள்வி எழுவது இயல்பே...

நம் வாழ்வில் மூன்றாவது மனிதனின் செயலின் பாதிப்பை நாம் உணர்வது தான் விதி என்று வரை அறுக்கப் படுகிறது... எவனோ ஒருவனின் கவனக் குறைவே நம் வண்டியின் சக்கரத்தை பஞ்சராக்குகிறது...  நம் வண்டி பஞ்சராகுவதின் காரணம் செவ்வாய் அல்லது வியாழன் என்றால் எப்படி சிரிப்பு வரும் என்பதை சற்று யோசித்துப் பார்த்தால் கீழே சொல்லப் போகும் விளக்கம் நன்றாக புரியும்...

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால் விலை வாசி உயரும் என்பதை அனைவரும் ஒத்துக் கொண்டுள்ளோம்... ஆனால் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு எந்த கிரகங்கள் மேல் நாம் குற்றம் சாட்டுகிறோம்.. 

ஊழல் தலை விரித்தாடுவது கிரக சாரங்களின் நிலை என்றால் ஏன் நாம் காங்கிரஸ் அரசை விமர்சித்துக் கொண்டிருக்கிறோம்.. ஒரு வேளை அப்படி விமர்சிப்பது நம் விதியோ? இப்படி கேட்டுக் கொண்டே போகலாம்.. மனிதன் கண்டுபிடித்த மிக சிறந்த கண்டுபிடிப்பு விதியாக தான் இருக்கும்.. 

கற்க கசடற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்கு தக 

என்ற குறளை அனைவரும் புரிந்து கொண்டாலே நம் வாழ்வில் இருள் போல் போர்த்தியிருக்கும் துன்பங்கள் அகன்று போய் விடும்...

[வானிலை ஆய்வு அறிக்கை எப்படி தவறாக வந்தாலும் அதை அறிவியல் என்று ஏற்றுக் கொள்கிற நீங்கள் என் ஜோசியத்தை அதே போல் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்பவர்களா நீங்கள், பூகோள பாடத்தை எத்தனை பேர் உங்கள் பிள்ளைகள் படிக்க நீங்கள் ஊக்கப்படுத்தி இருக்கிறீர்கள் என்று கேட்டுக் கொள்ளுங்கள்... விடை உங்களுக்கே கிடைக்கும்...]