politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

11.8.11

எழுச்சிக்கான அறிகுறிகள்..

அரசை பார்த்து மக்கள் அச்சப் படக் கூடாது, அரசு தான் மக்களை பார்த்து அச்சப் படவேண்டும்..

People Should not be afraid of their Government, Government should be afraid of their People


இன்று காலை இந்த வலைப் பதிவை படித்ததும், இது எதோ இங்கிலாந்து நாட்டு பிரச்சினை மட்டும் அல்ல நம் இந்தியாவிலும் புகைந்து கொண்டிருக்கும் செயலாக தான் பார்க்கிறேன்..

மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் எழுச்சியும், உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் எழுச்சியும், மற்றும் போராடும் பிற வர்க்க பிரதிநிதிகள் மேல் அரசின் இரும்பு கர அடக்குமுறை என்பது மக்கள் எழுச்சி மீது இந்த அரசு எவ்வளவு பயம் கொண்டுள்ளது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது...

போராட்டத்தை ஒடுக்க இந்த அரசானது பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது...

போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு...
போராட்டம் நடத்துபவர்கள் மீது களங்கம் கற்பித்தல்..
போராட்டம் செய்ய நினைப்பவர்களை மிரட்டுதல்...
போராடினால் காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்...
மற்றும்
ஊழலை கண்டுகொள்ளாமல் இருக்க அனைவரிடமும் ஊழலை பரவ செய்தல்..

ஒரு வைரஸ் கிருமி போல் ஊழல் பரவி கொண்டிருக்கிறது,
ஊழலை கண்டுகொள்ளாமல் செல்லும் பாங்கை இந்த அரசு வளர்த்து வருகிறது..
ஒரு கட்டத்தில் இங்கிலாந்து எப்படி ஸ்தம்பித்து இருக்கிறதோ அது போல் இந்தியாவும் மாறும் என்பதில் ஐயப் பாடில்லை..

ஆனால் அது வெகு காலம் ஆகுமா அல்லது ஆன்மீகத்தின் துணையுடன் அந்த தீ அணைக்கப் படுமா என்பது தான் கேள்வியே!

எது எப்படியோ மக்கள் எழுச்சி பெற்று விடுவார்களோ என்ற பயம் அரசின் எண்ணத்தில் வந்து விட்டதே, மக்கள் மனதில் எழுச்சிக்கான ஆவல் பிறந்து விட்டதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்கிறேன்...