politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

9.8.11

மார்க்சிஸ்டுகளுக்கு...

இந்த கட்டுரை மார்க்சிஸ்டுகளுக்கு மட்டுமே, மார்க்சிஸ்ட் என்ற பெயரில் மார்க்சை அணு அளவுக்கு கூட தெரியாதவர்களுக்கு அல்ல....

இந்திய அரசாங்கம் தன் சந்தையை பெருக்கிக் கொள்ளவே இலங்கை அரசுடன் நேற்றும் இன்றும் ஒப்பந்தம் போட்டு ஈழ தமிழனின் முதுகில் குத்திக் கொண்டிருக்கிறார்கள்...
அதற்கு விடை தேடாமல் , அந்த பிரச்சினையை வைத்து இந்திய அளவிலும் மாநில அளவிலும் பிணந்தின்னி கூட்டம் போல் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் பலர்...

தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று வாய் கிழிய கூவும் அனைவரும் நாடு கடத்தப் பட்ட ஈழ அரசை இந்திய மண்ணில் நிறுவுவதற்கு ஏன் ஒரு சத்தம் கூட போடாமல் அமைதி காக்கின்றனர்..

போராட்டம் என்பது இடத்திற்கு இடம் மாறும் என்பது மார்க்சிய கொள்கை..
நாங்கள் என்ன ஆயுதம் தாங்க வேண்டும் என்பதை என் எதிரியே தீர்மானிக்கிறான் என்பது மாவோ கொள்கை..
மற்ற அனைத்து நாடுகளின் பிரச்சினைகளிலும் மேற்கூறிய வசனத்தை கூறி அமைதி காக்கும் பொதுவுடைமை கட்சிகள் ஏன் ஈழம் என்று வரும் பொழுது மட்டும் ஆயுதம் தாங்குவது தவறு என்று கூற வேண்டும்...

ஒரு மாநிலத்தை அரசாண்டுக் கொண்டிருக்கும் பொழுதே, காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொழுதே உங்கள் எதிரிகளான மாவோ இஸ்ட்களை சமாளிக்க பொது மக்கள் கையில் ஆயுதம் கொடுப்போம் என்று பேசியது சரி என்றால், தன் உயிரை காத்துக் கொள்ள சக தமிழன் ஆயுதம் தாங்கியது என்பது எந்த விதத்தில் தவறு..

ஈழப் பிரச்சினை நிறம் மாறி ஆண்டுகள் பல ஆகிவிட்டது...
அந்த நிறம் மாறாமல் தடுக்க வேண்டிய கடமை பொதுவுடைமை கட்சிகளுக்கு உள்ளது, அதை விட்டு விட்டு உள்ளூர் அரசியலை கருத்தில் கொண்டு வேஷம் போடும் போலி பொதுவுடைமை வாதிகளால் பொதுவுடைமை கட்சி சிதைந்து வருகிறது...

பொதுவுடைமை கட்சி தேய்ந்து வருவதால் பொதுவுடைமை சிந்தனை உள்ள யாருக்கும் ஆனந்தம் தருவதில்லை, மாறாக ஆத்திரத்தை தான் தருகிறது... அந்த ஆத்திரம் ஏளனமாக வெளிப்படுகிறது...
மற்றவர்களின் விமர்சனத்திற்கு பதில் கொடுக்கும் முன் கொஞ்சம் யோசியுங்கள், நியாயம் இருந்தால் தட்டி கொடுங்கள் இல்லை என்றால் தட்டிக் கேளுங்கள்... அது தான் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு..

-உங்கள் கட்சி ஏன் நாடுகடத்தப் பட்ட தமிழ் ஈழம் அமைக்க குரல் கொடுக்கவில்லை என்று யோசித்து பாருங்கள்.. 

-சீனாவிற்கு எதிராய் அமைந்துள்ள திபெத் தின் நாடு கடத்தப் பட்ட அரசுக்கு எதிராய் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று யோசித்து பாருங்கள்.. அது சரி என்றால் நாடு கடத்தப் பட்ட ஈழ அரசு சரியானது தானே... 

-தமிழகத்தில் உள்ள அகதிகளின் நிலை குறித்து ச.தமிழ் செல்வன் போன்ற தோழர்கள் கருத்து கூறிய பிறகும் அது ஏன் கருத்துக் களத்தில் இணையவில்லை என்று கேள்வி கேளுங்கள்?

-பொதுவுடைமை ஊடகங்கள், உங்கள் கட்சியின் அதிகாரப் பூர்வ ஏடுகள் ஏன் இதை ஊதி பெரிதாக்கவில்லை என்று கேளுங்கள்?

- கடைசியாக, ஒவ்வொரு தேர்தலிலும் முதலாளித்துவ கட்சிகளுக்கு காவடி தூக்க வேண்டிய கட்டாயம் ஏன் பொதுவுடைமை கட்சிகளுக்கு வந்தது என்று கேள்வி கேளுங்கள்?

-தேர்தல் என்பது போலியானது என்று கூறும் உங்கள் கட்சி ஏன் ஒரு தேர்தல் தோல்வியை இந்த அளவுக்கு பெரிய தோல்வியாக கருதி கருத்து கேட்க வேண்டும் என்று யோசியுங்கள்?

-சரியான பதில் கிடைத்தால் நீங்களும் உங்கள் கட்சியை கேள்வி கேட்பீர்கள், இல்லை என்றால் மனசாட்சியை கழற்றி வைத்து விட்டு எங்களை கேள்வி கேட்டுக் கொண்டு இருங்கள்?