politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

27.8.11

கலக்குங்க.. குழப்புங்க..

சின்ன புள்ள தனமாய் நடந்து கொள்வதை ஆணிவேர் அடிக்கடி விமர்சனம் செய்ததை வாபஸ் பெரும் தருணம் வந்து விட்டதாகவே தெரிகிறது.. நமது நாட்டின் அடுத்த பிரதமராய் நேரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் முன் நிறுத்தப் பட்ட பொழுது அவர் முதிர்ச்சி அடைந்து விட்டார் என்று திரு. திக் விஜய் கூறியதை உறுதி படுத்தி உள்ளார் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய ராகுல் காந்தி அவர்கள்... 


இவர் உரை நடத்த வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லாமல் வேண்டுமென்றே ஒரு குட்டையை குழப்பி விட்டு சென்றுள்ளார் ராகுல்.. ஒரு வேளை பிரதமரையும் லோக்பால் மசோதாவுக்குள் கொண்டு வர காங்கிரஸ் ஒத்துக் கொண்டதால் வந்த எரிச்சலா என்று தெரியவில்லை... எது எப்படியோ தான் ஒரு தேர்ந்த அரசியல் வாதி என்பதை கோபம் கலந்த பேச்சில் நிரூபித்து விட்டார்... என்ன ஒரே ஒரு பிரச்சினை அவர் முகத்திரை கிழிந்து தொங்குவது தான் பார்க்க சகிக்க முடியவில்லை... 

அவருக்கு சில கேள்விகள், அநேகமாய் அனைவருக்கும் எழுந்திருக்கும்...

1. உங்கள் அரசு இந்த ஊழலை ஒழிக்க இத்தனை காலமாய் என்ன செய்தீர்கள்?

2. வேறு கட்சி ஆட்சி செய்தால் ஒரு நீதி [உத்தர பிரதேசம்] உங்கள் கட்சி ஆட்சி செய்தால் ஒரு நீதி [ மகாராஷ்டிரம் ] என்ற உங்கள் வெளிப்படையான எண்ணம் எங்களுக்கு ஏற்கனவே தெரிந்து விட்டது?

3. முஸ்லிம் லீகும், பொதுவுடைமை கட்சிகளும் இணைந்து தான் இந்திய சுதந்திரத்தை வென்று எடுத்தார்கள் என்ற உண்மையே இருட்டடிப்பு செய்து எதோ காங்கிரஸ் மட்டுமே சுதந்திரம் வாங்க உதவி புரிந்தது என்ற கட்டுக் கதைகளை புழக்கத்தில் விட்ட உங்களை எப்படி நம்புவது என்று தெரியவில்லை...

4. வெளிப்படையான தன்மை இருந்தாலே போதுமானது என்று கூறியுள்ளீர்கள், தகவல் அறியும் உரிமை சட்டம் என்ற வெளிப்படையான தன்மை ஏற்கனவே அமுலில் உள்ளது... ஆனால் அவற்றில் ஒவ்வொரு துறையாக சேர்ப்பதை விட்டு விட்டு தேசிய இறையாண்மை என்ற போர்வையில் பல்வேறு துறைகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளித்துக் கொண்டிருக்கும் பொழுது, எங்கே இருக்கிறது நீங்கள் கொண்டு வந்த வெளிப்படை தன்மை என்ற கேள்வி சாதாரணமாய் எழுவது தவிர்க்க முடியவில்லை...

5. தேர்தல் ஆணையத்தின் மேலே அவர்களுக்கே நம்பிக்கை இல்லை, எழும் சந்தேகங்களை புரளி என்று புறந்தள்ளி விடாமல் அது உண்மையோ என்று என்னும் அளவுக்கு துண்டு சீட்டு, கண்ணாடி பெட்டி என்று அடுக்கடுக்காய் தேர்தல் வேலைகளை இடியாப்ப சிக்கலாய் மாற்றுவது போலவே லோக்பால் மசோதாவை கொண்டு வரும் எண்ணம் உண்டு என்பதை இவ்வளவு வெளிப்படையாய் பேசுவீர்கள் என்று தெரியாமல் போய்விட்டது...

ஊழல் ஒழிக்க அரசு மனது வைத்தாலே போதும், ஊழலை ஒழிக்க முடியும்.. அதை விட்டு விட்டு ஊழலை தடுக்க புறப்படுகிறோம் என்று கிளம்புவது ஊழலை ஒழிக்கும் எண்ணம் துளி கூட உங்களுக்கு இல்லை என்பதை ஒத்துக் கொள்ளும் வெளிப்படையான எண்ணத்தையே காட்டுகிறது...