politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

30.8.11

நாட்டாம...

உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான மார்கண்டேய கட்ஜு, நேற்று ஹிந்து நாளிதழில் வந்த செய்தியின் படி அருமையான[?] கருத்துக்களை அள்ளி தெளித்துள்ளார்..

காட்டு மிராண்டி தனமான செய்கைகளை செய்யும் நபர்களுக்கு தூக்கு தண்டனை தான் தர வேண்டும் என்றும் அவர்களுக்கு கருணை காட்டக் கூடாது என்று கூறியுள்ளார்..

நீதிபதிகள் லஞ்சம் வாங்குவதை குறிப்பிட்டு கேட்கப் பட்ட இன்னொரு கேள்விக்கு அவர் கூறியிருக்கும் பதில் தான் நாட்டாமை தீர்ப்பு சரியாக சொல்வதில்லை என்று உறுத்திக் காட்டுகிறது..

நீதிபதிகள் லஞ்சம் வாங்குவது தவறு தான் என்றும், கடுமையான கண்டிப்பு காட்ட பட வேண்டும் என்று கூறிவிட்டு, நீதிபதிகள் லஞ்சம் வாங்கும் சூழ்நிலையை ஏற்படுத்துவது தான் தவறு என்று தன் இனத்திற்காக பரிந்து பேசுகிறார்...

நன்றாக படித்து ஒழுக்கம் பழக்க வழக்கம் குறித்த அனைத்து விழிப்புணர்வும் உள்ள நீதிபதிகளே சூழ்நிலை காரணமாய் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று பரிந்து பேசும் நீங்கள்,

உங்கள் வாயாலேயே காட்டுமிராண்டி என்று  பட்டம் சூட்டப்பட்ட கல்வி அறிவு அவ்வளவாய் இராத, தன் இனத்தவரை கூண்டோடு கொலை செய்த ஒருவனை பழி வாங்க புறப்பட்டது தவறு என்று எப்படி கூற முடிகிறது...

உங்கள் நீதிபதி தவறு செய்ய காரணம் சூழ்நிலை என்றால், ராஜீவை கொலை செய்ததும் எதோ ஒரு  சூழ்நிலை தானே...

ராஜீவ் ஒரு தேசத்தின் பிரதமர் என்பதாலேயே அவர் செய்தது எல்லாம் தவறு இல்லை என்றால், அடிமட்ட குடிமகன் செய்தது மட்டும் எப்படி தவறு என்று எடுத்துக் கொள்ள முடியும்...

உங்கள் வாதப் படியே, ஒருவன் திருந்துவதற்கு தான் தண்டனையை நீதிமன்றம் வழங்குகிறது என்றால் அவனை கொலை செய்வதால் எப்படி அவன் திருந்துவான் என்று எதிர்பார்க்க முடியும்...

தமிழ் நாட்டை தவிர ஈழ தமிழர்களுக்கு ஆதரவாய் எந்த மாநிலமும் இல்லை,
அவர்கள் பார்வையில் ராஜீவை கொலை செய்தவர்கள் என்ற பார்வை தான் உள்ளது...

ஆக இவர்களின் மரண தண்டனையை தள்ளி வைத்து மற்ற மாநிலத்தின் வோட்டு வங்கியை குறைத்துக் கொள்ள எந்த தேசிய கட்சியும் தயாராய் இல்லை, மத்திய அரசை பகைத்துக் கொள்ள எந்த தமிழக மாநில அரசும் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது...

அதே நாளிதழில் வாசகர் கடிதங்களில் பெர்னாண்டோ என்பவர் எழுதியுள்ள கடிதத்தில் கட்ஜுவுக்கு சரியான பதில் குடுக்கிறார்... எவ்வளவு தான் அவன் பெரிய தவறு இழைத்திருந்தாலும், அவனை தூக்கு கயிறுக்கு அனுப்புவது என்பது காட்டு மிராண்டிதனமே என்று சமுதாயத்தை சாடுகிறார்...

எத்தனையோ தமிழ் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்,
எத்தனையோ தமிழ் பெண்கள் கொலை செய்யப் பட்டுள்ளனர்..
எத்தனையோ தமிழ் பெண்கள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போயுள்ளனர்..
எத்தனையோ முறை நீதி வெட்கி தலை குனிய காரணமான நபர்கள் காட்டுமிராண்டிகள் இல்லை என்றால்
அவர்களை கொலை செய்த இவர்களும் காட்டு மிராண்டிகள் அல்ல என்பதே உண்மை..

யாரோ செய்த தவறுக்கு யாரோ பொறுப்பாக முடியுமா என்று கேட்டால், கேள்விகள் பிறந்து கொண்டே தான் இருக்கும்..
அந்த அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் வரை தீர்ப்பை மாற்றி சொல்லுங்கள்...

http://www.thehindu.com/todays-paper/tp-national/article2407436.ece