politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

20.8.11

தள்ளி வைக்கப்பட்டுள்ளது சந்தோசம்..

சமச்சீர் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப் பட்டதாலேயே எதோ சமச்சீர் கல்வியே வந்து விட்டது போல் குதிக்கிறது அதிக வாக்கு வங்கி உள்ள எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த கட்சி.. யாருக்கும் வெற்றி இல்லை யாருக்கும் தோல்வி இல்லை என்று பெருந்தன்மையுடன் கூறிய கலைஞர் திடீரென்று வெற்றி விழா கொண்டாடுங்கள் என்று கூறியதன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை..

எதோ சமச்சீர் பாடப்புத்தகம் மட்டுமே சமச்சீர் கல்வி என்பது போல் பேசுகிறார் திடீரென்று எதிர் கட்சி தலைவர் அந்தஸ்த்து பெற்றவர்..

முத்துக்குமரன் குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் இன்னும் அரசு வெளியிடவில்லை என்று பேசுகிறார் மரு. ராமதாஸ் அவர்கள்...

மொத்தம் 109 பரிந்துரைகளை கூறியுள்ளதாக தீக்கதிர் நாளேட்டில் வெளியான கட்டுரை வெளியிட்டுள்ளது...

ஏற்கனவே பல தனியார் பள்ளிகள் தனியார் நிறுவனங்களின் புத்தகங்களை அரசு வெளியிட்டுள்ள பட்டியல்படி புத்தகங்களை தருவித்து தங்கள் கொள்ளையை தொடங்கி உள்ளனர்..

ஏற்கனவே தனியார் பள்ளிகளின் கட்டணங்கள் திருத்தி அமைக்கப் பட்ட பிறகும் மீண்டும் ஒரு குழுவை அமைத்து மீண்டும் கட்டணத்தை சரி பார்க்க போவதாக கூறியுள்ளனர்..

இனைய தளத்தில் இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை ஒன்றாம் மற்றும் ஆறாம் வகுப்பு பாட புத்தகங்கள் இன்னும் ஏற்றப் படவில்லை என்ற உண்மை கசக்கிறது...

அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஒரே சீரான கல்வி கிடைத்தால் தான் சமச்சீர் கல்வி என்ற உண்மையான நிலை வரும்..

கத்தி கத்தி தொண்டை வலி வருவதால்  மிகவும் அதிகமான மாணவர்கள் கொண்ட வகுப்புகளுக்கு பாடம் எடுக்க செல்லவே விருப்பம் வரவில்லை என்கிறார் ஒரு அரசு பள்ளியின் ஆசிரியர்... இதே தான் அநேகமாக மனிதர்களாய் இருக்கும் அனைத்து அரசு ஆசிரியர்களின் கருத்தாகவும் இருக்கும்.. குறைந்த சம்பளம் வாங்குவதால் கற்று தர விருப்பம் இல்லாமல் தனி வகுப்புகள் நடத்தி கற்றுத் தருவதாக எண்ணி பாடங்களை வாந்தி எடுத்து வருகின்றனர் ஆசிரியர்கள்...

அபகஸ் என்ற சீன கணக்கு முறையை வைத்து கொள்ளை அடித்துக் கொண்டிருந்த நிறுவனங்களுக்கும் ஆப்பு அடித்திருக்கிறது சமச்சீர் கணக்கு  புத்தகத்தில் இருக்கும் பாடங்கள்.. அது தெரியாமல் ஏற்கனவே பல மாணவர்கள் இந்த வருடம் அபகஸ் கல்வி நிலையங்களில் சேர்ந்து விட்டனர்..

இந்த பத்து நாட்களில் ஒன்றே ஒன்று தெரிந்தது இந்த தீர்ப்பினால் இன்னும் எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கலாம் என்று கணக்கு போட ஆரம்பித்து விட்டனர் தனியார் பள்ளி நிறுவனங்கள்..
வழக்கம் போலவே நடக்கின்றன அரசு பள்ளிகள்...

ஒவ்வொரு மாணவனின் தனித் திறமையை ஊக்குவித்து அவனை எந்த துறைக்கு அனுப்புவது என்று முடிவெடுக்கும் ஆற்றலை வகுப்பு ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ளும் பொழுது சமச்சீர் கல்வி நனவாகும்...

அதுவரை இப்பொழுது நடைமுறையில் இருப்பது வெறும் கானல் நீர் தான்...
[கானல் நீர் என்பது எங்கோ இருக்கும் எதோ ஒன்றின் பிம்பம் என்பதால் அது பொய் அல்ல, ஆனால் அது நீங்கள் காணும் இடத்தில் இல்லை என்பது தான் உண்மை]

http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=59538

http://www.thehindu.com/news/cities/Chennai/article2357426.ece

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2355978.ece

http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=2931

http://www.scribd.com/doc/62715613/Samachcheer-Kalvi-Cpi-m