
அனைத்து தொழிலாளிகளையும், உழைப்பை மூலதனமாக போடும் ஒரு மனிதனாக பார்க்காமல், அடிமையாக தான் ஒவ்வொரு முதலாளிகளும் பார்த்து கொண்டு இருக்கின்றனர்... இந்த சங்கதி இல்லை மறை காய் மறையாக இருந்து வந்தாலும், பணம் கொழிக்கும் ipl என்னும் விளையாட்டு வியாபாரத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது... இங்கு இரண்டு முதலாளிகள், bcci மற்றும் ஒவ்வொரு அணிக்கும் ஒரு முதலாளி...
இந்த அடிமை தத்துவம், kkr எனப்படும் ஷா ருக் கான் முதலாளியாக உள்ள ஒரு அணியில் வெளிப்பட்டுள்ளது... ஒவ்வொரு ipl போட்டிகளிலும் இந்த அணி எதோ ஒரு சர்ச்சையில் சிக்கி கொண்டே தான் இருக்கின்றது...
இந்த முறை ஒரு வீரரின் காயத்தையும் பொருட் படுத்தாமல் அவரிடம் இருந்து உண்மையை மறைத்து, அவரை பலி கடாவாக்கி அவரை அடிமையை விட மோசமாக நடத்தி இருக்கிறார்கள்...
மேலும் இந்த பிரச்சினை பெரிதாகும, அல்லது குழி தோண்டி புதைக்கப் படுமா என்பது போக போக தெரியும்...
எப்படியோ, தர்மம் ஒரு நாள் வெல்லும் என்ற நம்பிக்கையில் தான் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறான் மனிதன்..
அது கனவு தான் என்று தெரியும் போதும் விழித்துக் கொள்வான அல்லது நிரந்தரமாக தூங்கி விடுவானா என்பது தான் என் கவலை...
http://www.timesnow.tv/Gautam-Gambhir-continues-to-blame-KKR/articleshow/4374327.cms
[the picture contains a slave market in atlanta georgia in 1864] http://www.sonofthesouth.net/slavery/slave-trader.htm