politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

6.8.11

இருளில் மூழ்கிய ஊடகம்...

அன்னை, இந்தியாவை விட்டு பறந்து சென்று அயல் நாட்டில் சிகிச்சை எடுக்க சென்றது, உடனடியாக யார் கவனத்துக்கும் வரவில்லை... காங்கிரஸ் கட்சியினரே முன்வந்து அவர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்றும், அறுவை சிகிச்சை வெற்றி கரமாக முடிந்து விட்டது என்றும், இன்னும் முடியவில்லை நாளை அல்லது அடுத்த நாள் அறுவை சிகிச்சை முடிந்து விடும் என்றும் குழப்பி குழப்பி சிதறடித்த பிறகும் இன்னும் தெளியவில்லை ஊடகம்...

நேற்று அம்மா வானத்தில் பறந்து குப்பை தொட்டிகளை பார்வையிட்டதும், உடனடியாக கவனத்துக்கு வராமல் முதல்வர் அலுவலகமே தகவல் கொடுத்து தெரிந்து கொண்டாலும் இன்னும் அடங்காத கேள்விகள் எவ்வளவோ...

முதல் முறையாக இந்திய வரலாற்றிலேயே நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியை அப்படியே எழுதியதற்காக PTI மீது அமைச்சர் வழக்கு தொடர்ந்ததும் நடந்து உள்ளது...

தமிழகத்தில் மண்ணெண்ணெய் விலை உயர்ந்திருப்பதை சுட்டி காட்டவும் தவறி விட்டது ஊடகம்.. ஒரு வேலை எந்த ஊடகத்தை சேர்ந்தவர்களும் மண்ணெண்ணெய் வாங்குவதில்லையோ?

முன்பெல்லாம் துப்பறியும் ஊடகம் என்ற பெயரில் கலக்கி கொண்டிருந்த ஊடகம், இப்பொழுதெல்லாம் அந்த வேலையை லோக் ஆயுக்தாவிடமும், CAG குழுவினரிடமும் அந்த வேலையே விட்டு விட்டார்கள் போல... ஹிந்து நாளிதழ் சில நாட்கள் மும்முரமாய் வெளியிட்ட விகிலீக்ஸ் பக்கங்களும் பேச்சு மூச்சின்றி கிடக்கின்றது... 

பல செய்தி தாள்களை படித்து, பல ஊடகங்களை பார்த்து தன் வேலை பளுவுக்கும் நடுவில் பலர் அரசியல் செய்திகளை வலைப்பூவில் பதிவு செய்து கொண்டு தான் வருகின்றனர்.. அதையும் நீர்த்து போக செய்ய புது சட்டம் தயார் நிலையில் உள்ளது... மேலும் தவறான செய்திகளும் இதனுடன் இணைந்து தவறான செய்திகளும் இணைந்தே வருகின்றது... அதுவும் வலைபூக்களின் நம்பகத்தன்மையை சோதித்து பார்க்கின்றது...

வெளிச்சத்தில் வருமா ஊடகங்கள், பொறுத்திருந்து பார்ப்போம்...