politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

7.4.11

பிள்ளையார் பிடிக்க குரங்காய்....


நமது நாட்டு மக்களுக்கு பொதுவாகவே மருத்துவத்தை பற்றி அபார ஞானம் உண்டு..
அவர்களை எந்த மருத்துவர்களாலும் ஏமாற்ற முடியாது...
அவற்றில் சில...
சளிக்கு மாத்திரை சாப்பிட்டால் குணமாகி விடும்...
எந்த காய்ச்சல் அடித்தாலும் ஊசி போட்டு கொண்டால் குணமாகி விடும்...
மல்டி வைட்டமின் மாத்திரைகளை தவறாமல் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் கூடிவிடும்...
எல்லா நோய்க்கும் மருந்து உண்டு...
எல்லா வகை நீரிழிவு நோய்க்கும், இன்சுலின் போட்டு கொண்டால் குணமாகி விடும்...
இப்படி நீங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம்...
இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக, மருத்துவர்களும் இதற்கு ஒத்து ஊதுவது, இவர்களின் நம்பிக்கயை ஊர்ஜிதப் படுத்திவிடுகிறது...
இதை எதிர்த்து யாராவது பேசினால், அவர்களை லூசு என்று முத்திரை குத்துவதும் நமது நாட்டில் சாதாரணமான விஷயம்...
இப்பொழுதோ இவர்கள் கொடுத்த தவறான சிகிச்சை முறையால், பேக்டீரியாக்கள் தங்களை முழுவதும் உருமாற்றிக் கொண்டு, எந்த மருந்தினாலும் செயலிழக்காத வாறு தன்னை மாற்றிக் கொண்டுள்ளது...
அதற்க்கு தோதாக, மருந்து நிறுவனங்களும் தங்களது தயாரிப்பு பார்வையை, பேக்டீரியாக்க லை கொள்ளும் மருந்துகளின் மேல் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு ஆண்டு தோறும் வருமானம் தரும் நீரிழிவு நோய் மற்றும் ரத்த கொதிப்பு நோய்க்கு மருந்துகளை கண்டுபிடிக்க சென்று விட்டது...
வைரஸ்களை கொல்கிறோம் என்று புறப்பட்டு, அதை விட பலமான ஒரு விரோதியை நாம் உண்டாக்கி விட்டோம் என்பது மட்டும் தெரிகிறது...
அவைகள் எப்படி தன்னை தானே மாற்றிக் கொண்டதோ அதே போல, மருத்துவர்களும் விழித்து எழுந்து தங்களை தாங்களே மாற்றிக் கொண்டால் ஒழிய, மருத்துவர்களை தெய்வமாக மதிக்கும் நம் நாட்டு மக்கள் பிழைக்க போவதில்லை...
http://www.medicalnewstoday.com/articles/221691.php