
தமிழ் நாட்டில் வியாபாரிகளிடம், ஒரு கொள்கை உண்டு..
வியாபாரத்தில எதுவும் தப்பில்ல சார்...
பணம் செய்வது என்றால் எந்த வழியில் வேண்டும் என்றாலும் சம்பாதிக்கலாம் என்பது தான் அது...
தப்பு செய்து மாட்டிக் கொண்டால் அவர்கள் கூறும் பதில் இது தான்...
அந்த எண்ணம் இப்பொழுது வியாபாரிகளை மாறியிருக்கும் மருத்துவர்கள், மருந்து கடை காரர்கள் இன்னும் உயிர் காக்கும் தொழிலில் இருக்கும் அனைவருக்கும் சென்று சேர்ந்திருக்கிறது என்பது தான் இந்த முதலாளித்துவ சமுதாயம் முடித்து வைத்துள்ள சாதனை...
கேரளத்தில் ஒரே நாளில் அனைவருக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெத்துக் கொடுத்து விட்டு அனைத்து மருத்துவர்கள் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட சென்று விட்டனர்...
இப்படி செல்வதினால் இவர்கள் பண்டிகையை கொண்டாட சென்றது போல் தெரியவில்லை...
மாறாக விடுமுறையை கொண்டாட சென்றதாக தான் இருக்கிறது...
இவர்கள் அனைவரையும் தனி தனியாக விசாரித்தால் ஒன்று மட்டும் கூறுவார்கள்,
வியாபாரத்தில எதுவும் தப்பில்ல சார்...
நான் சொல்வது என்ன என்றால் வியாபாரத்தினால் எதுவும் தப்பவில்லை சார்...
http://www.ndtv.com/article/india/kerala-another-case-of-mass-caesarean-101474