
வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு பத்து ரூபாய் சம்பாதித்தாலும், நீ இந்தியனாக இருந்தாலும் வரி கண்டிப்பாய் கட்ட வேண்டும்...
ஆனால் வியர்வை சிந்தாமல் நோகாமல் நோம்பு கும்பிட்டு கோடி கோடியாய் சம்பாதித்தால் நீ வெளிநாட்டு பிரஜையாக இருந்தாலும், உனக்கு வரி விலக்கு உண்டு...
நீ வீடு ஒன்று கட்டி குடியிருப்பவர்களின் ரத்தத்தை உறிஞ்சி பணம் சம்பாதித்தால் வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை...
அதே போல நீ ICC என்ற பெயரில் குளிர்சாதன அறையில் உட்கார்ந்து கோடி கோடியாய் சம்பாதித்தாலும் நீ வரி கட்ட வேண்டியதில்லை...
ஏனென்றால் நீ சம்பாதிக்கும் பணத்தில் குளிர்சாதனத்திர்க்கு பணம் தர வேண்டும், உயர்தர உணவிற்கு பணம் தர வேண்டும், roaming இல் உள்ள அலைபேசிக்கு பணம் கட்ட வேண்டும், குடிக்கும் தண்ணீர்க்கு பணம் தர வேண்டும்... என்று எத்தனையோ கையை கடிக்கும் செலவுகள்... ஆகையால் அத்தனை செலவுகளும் வருமானத்தையும் மீறி கரை கடப்பதால் எங்களுக்கு வரி விலக்கு வேண்டும்... இன்னும் எத்தனை ஊழல்கள் வெளி வந்தாலும், எத்தனை தடவை குற்றங்கள் நடந்தாலும், திரு மன்மோகன் ஒரே பதிலை தான் திரும்ப திரும்ப சொல்ல போகிறார்...
சத்தியமா, எனக்கு தெரியாம நடந்திடுச்சிங்கோ!
[ஏப்ரல் பூல் செய்தியாக இருக்காது என்ற நம்பிக்கையுடன்]
http://www.indianexpress.com/news/With-Pawar-batting--Cabinet-clears-tax-breaks-for-ICC/770097/