politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

27.8.11

கல்வியா? கொள்ளையா?

நமது நாட்டை ஆண்டு வரும் அரசு, மாணவர்களின் நலன் கருதி கல்வி கடன் கொடுக்கிறதா அல்லது தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்காக கல்வி கடன் வழங்குகிறதா என்று இருவேறு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், இதை ஒரு பெரும் மூலதனமாக ஒவ்வொரு வங்கிகளும் கண் வைத்திருப்பதை மறுக்க எவரும் தயங்க மாட்டார்கள் என்று எண்ணுகிறேன்... இதில் எவ்வளவு லாபம் எவ்வளவு நஷ்டம் என்ற வரவு செலவுக் கணக்குக்குள் செல்லாமல் இந்த கல்வி கடன் என்னும் மாய உலகில் மாணவனும் அவனது பெற்றோர்களும் எப்படி அவதிப் படுகிறார்கள் என்ற பதிவே இது... 

ஒவ்வொரு முறையும் கல்வி கடன் வழங்க வங்கிகள் மறுக்கும் சமயத்தில் பொங்கி எழும் ஊடகங்கள், ஏனோ இந்த கல்விக் கடனின் பின்னால் உள்ள ஒரு செய்தியை சரியாக உற்று நோக்காமல், அதை சரி செய்யும் நோக்கத்திலும் ஈடுபடவில்லை என்பது ஊடகங்களை நாள்தவறாமல் கவனித்து வரும் எண்ணத்ரவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்...

ஒரு மாணவன் கல்வி கடன் வாங்க அவன் நினைக்கும் வங்கிக்கு செல்ல முடியாது என்று அவனுக்கு அறிவுறுத்தப் படுகிறது, இந்த வார்டில் உள்ள மக்கள் இந்த வங்கியில் தான் கல்வி கடன் வாங்க வேண்டும் என்று ஒரு விதி இருப்பதாக தெரிகிறது..

ஒவ்வொரு மாணவனின் பெற்றோரும், எந்த வங்கியிலும் கல்வி கடன் இது வரை வாங்கவில்லை என்று கல்வி கடன் வழங்கும் அனைத்து வங்கிகளிலும் சென்று விண்ணப்ப தாளில் முத்திரையும் கையெழுத்தும் பெற்று வர வேண்டும்...

இவர்கள் போடும் முத்திரைக்கும் கையெழுத்துக்கும் சில வங்கிகளில் ஐம்பது ரூபாயும் சில வங்கிகளில் நூறு ரூபாயும் இதர வருமானம் என்ற தலைப்பின் கீழு ரசீது குடுத்து வசூலிக்கன்றனர்... அந்த கல்வி கடனை வாங்க குறைந்தது இருபது வங்கிகளுக்கு செல்லும் பெற்றோர்களின் மன உளைச்சலும், பண விரயமும் கணக்கிட்டு பார்த்தால் என்ன சொல்வதென்று தெரியவில்லை..

பணம் இல்லாத ஒரே காரணத்தால் தான் மேல் படிப்புக்கு தன் பிள்ளைகளுக்கு கல்வி கடன் வாங்க செல்கின்றனர் பெற்றோர்கள், அவர்களை இப்படி அழைக் கழிப்பதை விட்டு விட்டு எது எதற்கோ குடும்ப அட்டையில் முத்திரை குத்தும் அரசு ஊழியர்கள், கல்வி கடன் வழங்கப் பட்டுள்ளது என்று முத்திரை குத்தினால், மாணவன் ஏற்கனவே கல்வி கடன் வாங்கியவனா இல்லையா என்று தெரிந்து விடும்... 

ஒவ்வொரு வங்கியும் தன் வருமானத்திற்காக ஏழை மாணவர்களின் முதுகில் ஏறி சவாரி செய்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை... இதற்கு விடிவு காலம் வர சம்பந்தப் பட்ட மாணவனின் ஒத்துழைப்புடன் ஆணிவேர் போராடும் என்று இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.. விரைவில் இது குறித்து பல ஆவணங்களையும் சேகரித்த பிறகு ஆதாரத்துடன் சமூகத்தில் நிலவும் இந்த கறையை ஆணிவேர் ஊடறுக்கும் என்று கூறிக் கொள்கிறோம்...

இந்த விஷயத்தில் வாசகர்களும் தங்களுக்கு தெரிந்த அநீதிகளை பின்னூட்டங்களில் பட்டியலிட்டால் அது குறித்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆவணங்களை பெற்று இந்த சமூக அவலம் நீங்க வழி இருக்கிறதா என்று ஆராயப் படும் என்று தெரிவித்துக் கொள்கிறது ஆணிவேர்...