politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

28.7.11

பெற்றோர்களே, நீங்கள் தயாரா?

தாமதமாக வழங்கப் பட்ட நீதி, அநீதியாகும்...

உச்ச நீதிமன்றத்தின் வழ வழ கொள்கை, புத்தகம் கொடுக்கும் தேதியை ஐந்தாம் தேதிக்கு தள்ளி போட்டு இருக்கிறது...

மீண்டும் இரண்டாம் தேதி தொடரப் போகும் விசாரணையில் மூன்று நாட்கள் இடைவெளியில் புத்தகங்கள் வழங்க இயலாது என்றும், மீண்டும் கால அவகாசம் கேட்டு போராட போகிறார் தமிழக வழக்கறிஞர்..

விசாரணை இரண்டாம் தேதியே முடிந்து விடுமா இல்லை அனைத்து சிவில் வழக்குகள் போல இதுவும் பத்து வருடங்கள் இழு படுமா என்று தெரியவில்லை...

மஞ்சள் வேன்,
உதிக்கும் சூரியன்
சிவப்பு ஆப்பிள் 
செம்மொழி வள்ளுவர்
என்று புத்தகத்தில் எங்கு திருப்பினாலும் கலைஞர் வாடை அடிப்பதை கண்டு பிடித்து விட்டார் புத்திசாலி முதல்வர்..

அந்த கோபத்தில் நாளை அனைவரையும் வேலைக்கு போக வேண்டாம் என்றும், பள்ளி கூடம் போக வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் கலைஞர்....

தமிழக மக்களுக்கு சூடு சுரணை ஏதாவது இருக்கிறதா, இல்லை எவனாவது போராடட்டும் நாம் குளிர் காய்வோம் என்று வேடிக்கை பார்க்க போகிறார்களா என்று நாளைக்கு தான் தெரியும்...

எனக்கு தெரிந்து தி.மு.க நிர்வாகிகளின் கல்வி நிலையங்களிலேயே விடுமுறை அறிவிக்கவில்லை என்று கேள்வி...  

போராட மாணவர்கள் தயார், பெற்றோர்களே நீங்கள்  தயாரா?