politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

17.8.11

சரியான பாதையில் ஓடலாமே

 லெனின் தோழரின் அரசு என்னும் புத்தகம் படித்தவர்கள் இந்நேரம் புரிந்து கொண்டதை கூட காங்கிரஸ் கட்சி புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது .. 

ஒரு அரசின் அடித்தளமான நீதித்துறையும் மற்றும் ஊடகங்களும் இந்தியாவை ஆளும் அரசை அக்கக்காக கழட்டி துவைக்க ஆரம்பித்து விட்டனர் என்பது இன்று புதிதாக வெளிச்சத்துக்கு வந்த NTRO ஊழலும், http://www.dnaindia.com/india/report_court-to-probe-into-national-research-organisation-rs800-crore-scam_1576748 அண்ணா வை மட்டும் காட்டி மக்களின் கவனத்தை அரசின் மேல் எரிச்சல் ஊட்டும் செய்திகளும் உறுதிபடுத்துகின்றன... 

வழக்கமாய் மக்களை கட்டிப் போட்டு வைக்கும் சினிமா செய்திகளும், விளையாட்டு செய்திகளும் கூட எந்த மாற்றத்தையும் தராமல் மக்கள், ஜனநாயகம் என்று கூறப்படும் போலி வார்த்தையின் நிஜமான கோர முகத்தை பார்த்தபடி உள்ளனர்.. 

போதாக்குறைக்கு அனைத்து வளரும் நாடுகளிலும் மூக்கை நுழைத்து கலகம் விளைவிக்கும் உலக ரௌடியும் அண்ணா விஷயத்தில் போகிற போக்கில் எதோ ஒன்றை சொல்லி பத்த வச்சிட்டியே பரட்டை என்று சொல்ல வைக்கிறார்...
 

பரட்டை ஏன் இவர் விஷயத்தில் நமக்கு அறிவுரை சொல்கிறார் என்று விசாரிக்க ஆரம்பித்துள்ளனர் காங்கிரஸ் கட்சியினர்.. http://www.thehindu.com/news/national/article2366033.ece அமெரிக்க நிறுவனங்கள் பல அண்ணாவின் குழுவில் உள்ள பலரின் அரசு சாரா இயக்கங்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை... அமெரிக்கா தான் பல நாடுகளில் தனக்கு வேண்டிய அரசை நிறுவி குளிர் காய்கிறது என்பதும் பலருக்கும் தெரியும்... இதற்கு ஆதாரமாக எத்தனை ஜான் பெர்க்கின்ஸ் வந்தாலும் ஒரு அரசு அதை ஒத்துக் கொண்டதாக சரித்திரம் இல்லை... கியூபா அரசு எத்தனை முறை கரடியாக கத்திய பொழுதும், இராக்கில் சதாம் உயிருக்கு பயந்து கூப்பாடு போட்ட போதும் இன்னும் பல ஊடகங்கள் அவற்றை கட்டுக் கதை என்று தான் திரித்து சொல்லி வருகின்றனர்...
 

அமெரிக்காவின் ஆசை என்ன என்று ஆராய்ச்சி செய்து அதை எங்களுக்கு சொல்வீர்கள் என்று எல்லாம் நாங்கள் நம்பவில்லை.. மேலும் அவற்றை தேசிய ரகசியம் என்று கூறி முடக்கி தான் வைக்க போகிறீர்கள்... அவர்களுக்கு காவடி தூக்குவதை விட்டு விட்டு இனி மேலாவது உருப்படியாக நல்லவிதமாக ஆட்சி செய்யுங்கள்... புதிய பொருளாதார கொள்கைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, அரசை எதோ தனியார் நிறுவனம் போல் நடத்தாமல் உங்களை நம்பி வோட்டு போட்ட மக்களின் எண்ணத்திற்கு மதிப்பு கொடுத்து இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாருங்கள்.. ஏழைகளை  பணக்காரனாக்குகிறேன் என்று கூறி மேலும் அவனை ஏழையாக்காமல், மேலும் ஏழையாகாமல் அவனுக்கு தேவை யானதை கொடுத்து நிம்மதியாக வாழ வையுங்கள்...

அது தான் நீங்கள் உண்மையாக இந்தியர்களுக்கு வாங்கி தரப் போகும் சுதந்திரம்.. இப்பொழுது இருக்கும் சுதந்திரம் வெறும் காகித மலர் தான்..