politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

23.8.11

முற்றும் கோணல்...

தெரியாமல் பேசுவதும் 
தெரியாதது போல் பேசுவதும் 
தெரிந்தே பேசுவதும் 
தெரிந்தும் தெரியாமல் பேசுவதும்
இந்த நான்கு வகைகளில் இது எந்த வகை என்று தெரியவில்லை...

சட்டமன்ற உறுப்பினர்கள் சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் பொது பாட புத்தகங்களை வழங்கியாகி விட்டது, ஆனால் சமச்சீர் கல்வியில் உள்ள குறைபாடுகள் கலையப் படவேண்டும் என்று பேசினால், சமச்சீர் கல்வி என்பது பாட புத்தகங்கள் மட்டுமே என்னும் எண்ணத்தில் பேசியிருக்கிறார் தமிழக முதல்வர் ... 

இதை தெளிவுப் படுத்த வேண்டிய அமைச்சர்கள் இதற்கு எப்பொழுதும் போல் மேஜையை தட்டி ஜால்ரா போட்டு உள்ளனர்...

ஒரு வேளை சமச்சீர் கல்வி என்பதே பொது பாட புத்தகம் மட்டுமே என்ற எண்ணத்தை நிலை படுத்தவே இப்படி பேசி உள்ளார் என்றால் அதை தட்டிக் கேட்க வேண்டிய எதிர்கட்சியும் கழுதை குதிரை என்று காமடி பண்ணி கொண்டிருக்கிறார்கள்... [என்னிடம் பேசிய ஒருவர் சமச்சீர் கல்வி என்பதை அரசு பொது பாட திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது என்று கூறினார்... எந்த ஊடகத்திலும் அதை பற்றிய தடயம் கிடைக்காததால் அதை பற்றி இங்கு பதிவு செய்ய முடியவில்லை...]

நீதிமன்றமும் மக்கள் மன்றமும் தான் இந்த மாற்றத்தை வேண்டியது,
பா.ம.க வும் பொது உடமை கட்சிகள் மட்டுமே இதற்க்கு போராடியது போல் அவர்களை குறை சொல்வது எதற்கு என்று தெரியவில்லை... 

ஒரு வேளை சமீப நாட்களாக அம்மாவுக்கு ஜால்ரா போடுவதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான பொது உடமை கட்சி தற்போது தவறுகளை சுட்டி காட்ட ஆரம்பித்திருப்பதால் வந்த எரிச்சலா என்று தெரியவில்லை..
எது எப்படியோ இது பெரும்பான்மை மக்களை அவமதிக்கும் செயலாகும்...
அ.தி.மு.க ஆட்சி மன்றத்திலே ஏறிய அன்றே மிக தெளிவாக ஆணிவேர் கூறியது முதல் கோணல் என்று...
அந்த முதல் கோணலை இன்னும் நியாயப் படுத்திக் கொண்டிருப்பது இந்த அரசு முற்றும் கோணலான பாதையில் செல்வதையே சுட்டி காட்டுகிறது...