politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

18.8.11

கனவு மெய்ப்படுமா?

ஒரு போராட்டம் வெற்றி அடைய ஒற்றுமை மிக முக்கியம்.. அந்த ஒற்றுமை வருவதற்கு ஊடகத்தின் தேவை அல்லது மக்களிடம் நேரிடையாக செல்வது அவசியம்... அண்ணா ஹஜாறேவின் போராட்டத்திற்கு ஊடகங்களின் பங்கு மிக அதிகம்.. அவர் நேரிடையாக மக்களை சென்று சந்திக்கவில்லை, பொதுக் கூட்டம் போடவில்லை அதனால் தான் அவர் போராட்டத்தில் பங்கு கொள்ள ஊடகங்களின் பக்கமே செல்லாத யாருக்கும் விருப்பமில்லை [தெரியவில்லை என்பது தான் உண்மையும் கூட]. தூக்கு தண்டனை கைதிகளின் போராட்டத்திற்கும் அதே நிலைமை தான் என்ன இங்கு சுய ஊடகங்களான வலைப்பக்கங்களின் அணிவகுப்பு சிறந்த உதவி புரிகிறது... 

ஆனால் இந்த மூன்று நாட்களில் வலைப் பக்கங்களில் சுற்றிய பொழுது என் கண்ணில் பட்ட பல பின்னூட்டங்களில் கருத்து வேறுபாடுகள் இந்த போராட்டங்களின் ஒற்றுமையை குலைப்பதாக உள்ளது..
நீ பூநூளிஸ்ட், 
நீ மார்க்சிஸ்ட், 
நீ லெனினிஸ்ட், 
நீ இந்து வெறியன், 
நீ முஸ்லிம் வெறியன்,
நீ கன்னடன், 
நீ தமிழன், 
நீ ஈழ தமிழன் 
என்று அனைவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு ஒவ்வொரு திசையாக நிற்கிறோம்..

சமச்சீர் கல்விக்காக இடது சாரிகள் ஜூலை 24ஆம் தேதியை வகுப்பு புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்தால் அதில் கலந்து கொள்ளாமல் வலது சாரிகள் ஜூலை 26 ஆம் தேதியை வகுப்பு புறக்கணிக்குமாறு அழைப்பு விடுக்கின்றனர்.. ஜூலை 26 வகுப்பு புறக்கணிக்கும் போராட்டத்தை வலது சாரிகள் நடத்துவதால் இடது சாரிகள் புறக்கணிக்கின்றனர்.. ஆக மொத்தம் ஒரே ஒரு போராட்டம் கூட ஒற்றுமையுடன் நடக்கப் போவதில்லை... 

நம்மை சுரண்டி ஊழலை வளர்த்து சம்பாதிக்கும் பெரிய பண முதலைகள் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதில்லை.. ஆனால் நாம் ஒருவரை ஒருவர் ஊக்கப் படுத்துவதில்லை... 
எனக்கு கடவுள் இல்லை என்று தெரியும், என் மனைவிக்கு கடவுள் இருக்கிறார் என்று நம்பிக்கை, இருவரும் இந்த விஷயத்தில் மோதிக் கொண்டால் வீடு படும் பாடு என்ன என்று எல்லாருக்கும் தெரியும். அது போல் ஏன் நாம் நாட்டில் இருக்கக் கூடாது.. 

உன் கொள்கை உனது என் கொள்கை எனது என்று பேசிக் கொண்டே யார் சரி என்று பார்க்காமல் எது சரி என்று பார்க்கும் பார்வையை வளர்த்துக் கொள்ளும் வரை நீங்களும் நானும் வாய் வலிக்க பேசிக் கொண்டிருக்கலாம், கை வலிக்க எழுதிக் கொண்டிருக்கலாம்... ஆனால் மாற்றம் மட்டும் நழுவிக் கொண்டே போகும்.. 

எது சரி என்று விவாதிப்போம், நம் அனைத்து வித்தியாசங்களையும் மீறி நமக்கு ஒரு ஒற்றுமை உண்டு... 
அது ஏமாற்றப் படுபவர்கள், 
முதுகில் குத்தப் படுகிறவர்கள், 
சுரண்டப் படுபவர்கள், 
கஷ்டப் படுபவர்கள்... 

ஒரு கட்டுரையில் இது குறித்து திருக்குறளை மேற்கோள் காட்டியிருந்தார் ஒருவர், 
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல் என்று,
இது நடக்குமா
என் கனவு நனவாகுமா 
வாழ்க்கையில் நீங்கள் கஷ்டப் படவில்லை என்றால் இந்த கட்டுரை உங்களுக்கானது அல்ல...