politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

16.8.11

விளையாட்டா போச்சு

கூலி வேலை செய்யும் தொழிலாளி குறைந்த பட்சம் உடல் உழைப்பை ஆறு மணி நேரங்கள் பயன்படுத்தி வேலை செய்தால் 150 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை ஒரு நாள் சம்பளமாய் கிடைக்கும்.. 
கணினி முன் அமர்ந்து மூளையை கசக்கி வேலை செய்யும் தொழிலாளி ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் எட்டு முதல் 14 மணி நேரம் உழைத்து அவன் படும் சிரமத்திர்க்கேற்ப நாற்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை மாத சம்பளம் வாங்குகிறான்.. 


சம்பள ஏற்றத்தாழ்வுகள் முதலாளித்துவ உலகில் ஏற்புடையது என்பதால் என் கேள்வி அதை பற்றி அல்ல.. 

மேற்கூறிய சம்பவங்களை நம் இந்திய மட்டை பந்து அணியின் செயல்பாடுகளுடன்  ஒத்துப் பார்ப்பது ஆகும்... 

முன்பெல்லாம் தோல்வி அடைந்தால் மிகவும் சாதாரணமாக வெற்றி பெற்ற எதிர் அணியினர் சிறந்த முறையில் விளையாடினார்கள் என்று ஒத்துக் கொள்ளும் மனப் பாங்கும் காணாமல் போய் கொண்டிருக்கிறது என்று எண்ண தோன்றுகிறது... விளையாடும் வீரர்களுக்கு ஓய்வில்லை, காயம் அடைந்த வீரர்கள் ஓய்வெடுக்க விட வேண்டும் என்று கூறுவது நம் உழைக்கும் வர்க்கத்தை ஒரு நிமிடம் மனக்கண்ணில் நினைத்து பார்க்க வைக்கிறது... உடல் நிலை சரி இல்லை என்றாலே ஒரு நாள் லீவு கேட்டால் நம்மை கொலை குற்றம் செய்தவன் போல் பார்க்கும் உலகம் இது என்பது மனக் கண்ணில் அகல மறுக்கிறது. 

அணில் கும்ப்ளே மூக்கில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு பந்து வீசி விக்கெட்டுகள் வீழ்த்தியது இன்னும் மனக் கண்ணில் இருந்து அகல மறுக்கிறது... 
இவர்கள் விளையாட இவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள், பணம், உயர்தர சிகிச்சை மற்றும் உல்லாச வாழ்க்கை என்பவற்றை கணக்கில் கொண்டால் ஓய்வில்லை என்று சொல்வது சப்பை கட்டு கட்டுவதாக தெரிகிறது.. மேற்கிந்திய தீவுகளிடம் சென்ற இரண்டாம் நிலை வீரர்களிடம் இருந்த உற்சாகம் இங்கிலாந்துக்கு சென்ற வீரர்களிடம் இல்லை என்பதே உண்மை... 

ஆயிரம் பத்தாயிரம் என்று கஷ்டப் பட்டு சம்பாதித்த காசை தான் விளையாட்டரங்கில் செலவிடுகிறான்.. அந்த காசு வீணாய் போனது என்ற துக்கத்தில் ஒரு ரசிகன் பேசியதை கூட தாங்கி கொள்ளும் மன நிலையில் வீரர்கள் இல்லை என்பது கசப்பான உண்மை... 

ஆக அந்த மன நிலைக்கு வருவதற்கு என்ன காரணம் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது... விளையாட்டு என்பதையும் மீறி வியாபாரம் புகுந்து விளையாடுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது... 

விலை வாசி உயர்வில் ஊக வணிகத்தின் பங்கு என்ன என்பது விவரம் தெரிந்தவர்களுக்கு தெரியும் அது போல் மட்டை பந்து, மல்யுத்த விளையாட்டை போல் ஊக விளையாட்டுக்கு தன்னை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது உண்மையோ என்று என்ன தோன்றுகிறது... 
அனைத்து மதங்களும் போலியானது என்ற உண்மை அனைத்து மதங்களின் கொள்கைகளை படித்தவர்களுக்குன் நன்கு புரியும், அது போல் நம் இந்திய தேசத்தில் மட்டை பந்து விளையாட்டும் ஒரு மதமாய் உருவகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஊடகங்கள்.. 

சச்சினை கடவுளாக சித்தரிக்கும் வேலையும் நடக்கிறது... எந்த மது பான விளம்பரங்களிலும் நடிக்க மாட்டேன் என்று தன் தந்தைக்கு சத்தியம் செய்து கொடுத்ததாக மார் தாட்டி கொள்ளும் சச்சினை ஏமாற்றி கிங்க்பிஷேர் விளம்பர படத்தில் முன்னணியில் நிறுத்தி உள்ளார் விஜய் மல்லையா... தான் நடித்து கொடுத்தது சோடா விளம்பரத்திற்கு தான் என்று சச்சின் நம்பினால் அவரை நம்புவதற்கு விஷயம் தெரிந்தவர்கள் தயாராய் இருக்கப் போவதில்லை...

இங்கிலாந்து அரசை காக்க இந்திய அணி விட்டுக் கொடுத்ததா?
சூதாட்டத்தின் தலை நகரான இங்கிலாந்து, நம் வீரர்களை காவு வாங்கியதா?
இந்தியாவில் நடக்கும் குழப்பங்களை நீர்த்துப் போக இவை அரங்கேற்றப் பட்டதா?
என்று எண்ணற்ற கேள்வி எழுந்தாலும் என் மனதில் ஒரே கேள்வி...
என்று நம் மக்கள் முக்கியமான பிரச்சினைகள் மேல் கவனம் செலுத்தாமல் இது போன்ற மட்டை பந்து விளையாட்டை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்பது தான்?

[விளையாட்டை பற்றியும் திரை உலகை பற்றியும் எழுதக் கூடாது என்று நினைப்பதை, அதனுள் ஒளிந்திருக்கும் அரசியல் என்னை விடுவதில்லை... இதன் மீது உள்ள என் மௌனத்தை கலைக்க விக்கிரமாதித்யனின் வேதாளம் போல் அடிக்கடி வந்து கேள்வி கேட்டு பதில் வரவைக்கின்றன][எழுதியுள்ள கட்டுரைக்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று நினைத்தால் ஆணிவேர் பொறுப்பல்ல]