politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

16.8.11

பரமபதம்

இலவசங்கள் என்ற பெயரில் லஞ்சம் வாங்கி ஓட்டு வாங்கினார்களா அல்லது அது கொள்கை முடிவா என்று பெரிய விவாதம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இவற்றை எல்லாம் குடுப்பேன் என்று சொல்லி விட்டு அதை எப்படி எல்லாம் குடுக்காமல் நிறுத்த முடியும் என்று கணக்கு போட்டு கொண்டிருக்கிறார்கள் தமிழகத்தின் ஆளும் கட்சியினர்... 
இலவசங்கள் கொடுப்பது சட்டப்படி தவறு என்று நீதிமன்றம் மூலமாகவே சொல்ல வைத்து சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.. 
முதலில் நம் பார்வைக்கு வருவது மாணவர்களுக்கு கொடுப்பதாக கூறிய மடிக்கணினி, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் [கவனிக்க- அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு] குடுப்பதாக [எண்:18 ] தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு இருந்தாலும், இது வரை அதை பற்றி மூச்சையும் காணோம் பேச்சையும் காணோம்.. இதை பற்றி எந்த ஊடகமும் விசாரிப்பதாக கூட தெரியவில்லை...

இரண்டாவது, சமீபத்தில் சட்ட மன்றத்தில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த அம்மையார், தமிழ் நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பற்றிய எந்த தகவலும் அரசிடம் இல்லை என்று தெரிவித்திருந்தார்..... http://www.maalaimalar.com/2011/08/08150235/No-list-of-those-under-the-pov.html
ஆனால், எண்:4 , வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு 20 . லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
அடிப்படையில் வறுமை கோட்டுக்கு கீழே யார் இருக்கிறார்கள் என்று தெரியாமல் இந்த திட்டங்களை எப்படி செயல் படுத்தப் போகிறார் என்று தெரியவில்லை... 

மூன்றாவது, ஊக வணிகம் ஒழிக்கப் படும் என்று எண்: 49  இல் குறிப்பிட்டுள்ளார்.. இந்த ஆண்டு இது ஒழிக்கப் படாது என்பது தெளிவாக தெரிகிறது.. 

நான்காவது, எண்: 26 இல் இலங்கை தமிழ் அகதிகளுக்கு தரமான இருப்பிடம், தண்ணீர் மருத்துவ வசதி கல்வி ஆகியவை வழங்கப் படும் என்று கூறியுள்ளது இந்த ஆண்டு நிதி அறிக்கையில் இடம் பெறவில்லை...

கடைசியாக என் கண்ணில் உறுத்துவது, 
எண்: 6 இல் வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு மூன்று சென்ட் இடம் அளிக்கப் படும் என்று கூறியுள்ளார்... ஆனால் வெற்றி பெற்று வந்த பின் அவர் ஆளுநர் உரையில் தெரிவித்த கருத்தில் அனைத்து காலியிடங்களும் ஏற்கனவே பழைய அ.தி.மு.க ஆட்சிகளிலே குடுக்கப் பட்டு காலியாகி விட்டதாகவும் இதற்கு மேல் குடுப்பதற்கு தமிழகத்தில் காலி இடங்களே இல்லை என்றும் முகத்திற்கு நேராய் நின்று ஓட்டு போட்ட மக்களின் முகத்தில் குத்தியுள்ளார்.. http://ibnlive.in.com/news/no-waste-land-left-to-give-poor/157599-60-118.html
இதை தட்டி கேட்க வேண்டிய எதிர்க்கட்சி தலைவராய் இருப்பவர் அமைதியாக இருக்கிறார்.. சென்ற தி.மு.க ஆட்சியிலே இது குறித்து சத்தமாய் குரல் கொடுத்துக் கொண்டிருந்த பொதுவுடைமை வாதிகள் பியூஸ் போன பல்பாய் திரிகிறார்கள்...
இது பற்றி அலச அ.தி.மு.க வின் அதிகாரப் பூர்வ தேர்தல் அறிக்கையை இத்தனை காலமாய் தேடி இன்று தான் இணையத்தில் கிடைத்தது.. http://www.aiadmkallindia.org/AIADMK%20Election%20Manifesto%20-%20Tamil%20Nadu%20State.pdf

அனைத்து அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் இந்த விஷயத்தில் மனசாட்சியை கழற்றி வைத்து விட்டு கேள்வி கேட்க்காமல் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை..