politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

17.8.11

மந்திரக் கோலை தேடி..

ஊழலை ஒழிக்க மந்திர கோலை தேடி கொண்டிருப்பது, இந்த அரசு ஊழலில் அடக்கி ஒடுக்குவதில் அக்கறை காட்டவில்லை என்று தெரிகிறது...

ஒவ்வொரு முறையும் ஊழல் நடந்ததை கண்டுபிடிக்க அரசு இயந்திரமான உச்ச நீதி மன்றமும் மற்ற அரசு அமைப்புகளும் தான் முயற்சி செய்கின்றது.. அவை கண்டுபிடித்த உடன் அவற்றை விசாரித்து ஊழலை ஒடுக்கி இருந்தால் இப்பொழுது தடுக்கப் போவதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை..

சட்டத்தை நிறைவேற்ற மக்கள் உங்களை அதிகாரத்தில் உட்கார வைத்து விட்டார்கள், யார் தேர்ந்தெடுத்தார்களோ அவர்களின் ஆசைக்கு இணங்க மறுத்தால் அது ஜனநாயக படுகொலை.. அதை விட்டு விட்டு நீங்கள் செய்யும் தவறுக்கு ஜால்ரா போடாமல் எதிர்த்து கேள்வி கேட்பது ஜனநாயக படுகொலை என்றால் விவரம் தெரியாதவர்கள் கூட எழுச்சி பெற்று விடுவார்கள் என்பது தான் உண்மை... 

எப்படியோ இந்த எழுச்சி நல்ல முறையில் முடிந்தால் சரி.. அதை விட்டு எப்பொழுதும் போல ஒரு திருடனுக்கு பதில் இன்னொரு திருடனிடம் இந்த நாட்டை தூக்கி கொடுத்தால் மீண்டும் எழுவதில் முதுகு வலி தான் வரும்...
எத்தனை தடவை தான் எழுந்து எழுந்து உட்கார்வது என்று கடுப்பு கூட வரலாம்... 

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது... 

போராட்டம் நடத்துவதில் காங்கிரஸ் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கேள்விகள்:

1. போராட்டம் நடத்துவதால் அந்த பகுதிக்கு வரும் மக்களின் உரிமை பாதிக்கப் படும் என்று அக்கறை கொள்ளும் நீங்கள், உங்கள் மந்திரிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளும் வாகனத்தில் செல்லும் பொழுது பாதுகாப்பு காரணமாய் சாதாரண மக்களின் உரிமைகள் பாதிக்கப்படுவது கண்ணுக்கு தெரியவில்லையா?

2. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் இருந்த பொழுதே, உங்களுக்கு சாதகமாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முறியடித்த நீங்கள் உங்கள் பலம் நாடாளுமன்றத்தில் அதிகமாக உள்ள பொழுது உங்களுக்கு சாதகமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாதா?

3. அண்ணாவுடன் பேசுவதற்கு தயாராக உள்ளோம் என்று கூறும் நீங்கள் இது வரை நீங்கள் பேசியதின் விளைவு தானே இது என்று தெரியவில்லையா? அவர் ஊழல்வாதி என்று உங்கள் அரசு அவரை குற்றம் சாட்டிய பின் நடவடிக்கை எடுக்காமல் அவருடன் பேச்சு வார்த்தை நடத்த தாயாராவது ஏன்?

4. போராட்டம் நடத்த நிபந்தனைகள் உண்டு என்றால் அது அனைவருக்கும் பொதுவா இல்லை எதிர் கட்சிகளுக்கு மட்டும் பொதுவானதா?

5. கடைசியாக, உத்தர பிரதேசத்தில் தடை உத்தரவு அமலில் இருந்த பொழுது எல்லோர் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு சென்று வந்த, உங்கள் ராகுல் காந்தியை உத்தர பிரதேச அரசு கைது செய்திருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?

ஊழலை ஒழிக்க நீங்கள் சொன்ன மந்திரக் கோல் வேறு எங்கும் இல்லை உங்கள் மனசாட்சி தான் அது... மனசாட்சியை அடகு வைத்தவர்கள் தேடிக் கொண்டு தான் இருப்பார்கள்...