politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

8.10.11

மால்குடி சித்தன்...

இன்று பிறக்கும் இவன்,

இது வரை சாதாரணமாய் கேள்வி கேட்காமல் வழக்கத்தில் இருக்கும் சிலவற்றை கேள்வி கேட்க போகிறான்...

முதல் கேள்வி:

அநேகமாக இந்த கதை அனைவருக்கும் தெரியும்...

விற்பனை துறையில் இருப்பவர்களுக்கு  இன்னும் அதிகம் தெரியும் வாய்ப்பும் உள்ளது..

ஒரு பெரிய வெள்ளை தாள் அல்லது வெள்ளை பலகையை காட்டி அதில் ஒரு கருப்பு புள்ளி வைத்து என்ன தெரிகிறது என்று கேட்பார் ஒருவர்...

அநேகமாய் அனைவரும் தரும் பதில் ஒரு கருப்பு புள்ளி தெரிகிறது என்பதாகவே இருக்கும்..

அதற்கு கேள்வி கேட்டவர்,

இவ்வளவு பெரிய வெள்ளை தாள் இருக்கிறது அது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை, மாறாக ஒரு சிறு கறும் புள்ளி மட்டும் தான் தெரிகிறதா? என்று கேள்வி கேட்பார்...

இது தான் நேர்மறை எதிர்மறை என்று விளக்கம் வேறு கொடுப்பார்...

இனி மால்குடி சித்தனின் கேள்வி...

விற்பனை துறையில் 85% எடுத்த பிறகும் உங்களுக்கு இலக்கை எட்டாத அந்த 15% மட்டும் எப்படி சார் கண்ணுக்கு தெரிகிறது?

எதிர்மறை எண்ணம் இருந்ததால் தான் parachute என்ற உயிர் காக்கும் சாதனம் கண்டுபிடிக்கப் பட்டது என்பதும் உண்டே...

விற்பனை துறையில் பல்லாயிரம் கஷ்டங்களை அனுபவிக்கும் உள்ளங்களுக்கு அர்பணிப்பு 


பிற்சேர்க்கை: தோழர் சண்முகவேல் கூறிய பிறகு நான் செய்த பிழை என் கண்ணில் பட்டது, எதிர்மறை எண்ணம் parachute  கண்டுபிடிக்க உதவியது என்று குறிப்பிட்டிருந்தேன்... அதை எதிர்மறை எண்ணம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது, உதவக்கூடியது எதுவும் நேர்மறையே