politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

17.10.11

ஊடறுக்கும் ஊடகம்

காசு கொடுத்தால் செய்தி போடும் ஊடகங்கள் மத்தியில் http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2535541.ece நேர்மையாக பலவற்றை ஆராய்ந்து செய்தி வெளியிடும் ஊடகங்களாக வலை பூக்கள், அந்த வெற்றிடத்தை நிரப்புகின்றன...

அணு மின் நிலைய போராட்டம் குறித்து முக்கியமான ஊடகங்கள் அனைத்தும் வாயை மூடிக் கொண்ட பின் கூடல் பாலாவின் வலை பூ அங்கு நடக்கும் விஷயங்களை ஒரு நேரடி ஒளி பரப்பு போல செய்திகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது...

கௌசல்யா என்பவற்றின் வலை பூவிலும் இதற்காகவே மெனக்கெட்டு தொண்ணூறு கிலோ மீட்டர் பயணம் செய்து தன நேரடி அனுபவத்தை பதிவு செய்து உள்ளார்.. http://kousalya2010.blogspot.com/2011/10/blog-post_17.html

போராட்டம் நடக்கும் இடத்தின் அருகில் இல்லாத காரணத்தால், உலகத்தை சுருக்கி கைக்குள் வைத்திருக்கும் இனைய உலகத்தில் உலவும் பல்வேறு கருத்துக்களை உங்கள் முன் போராட்டத்திற்கு ஆதரவாக என் பதிவுகள் மூலம் வைத்துக் கொண்டு வருகிறேன்...

கூடங்குளம் மட்டும் அல்ல மற்ற அனைத்து அணு மின் நிலையங்களின் நிலை குறித்தும்  முடிவு எடுக்க இந்த போராட்டத்தின் வெற்றி மட்டுமே நிர்ணயிக்கும்...

இன்று அப்துல் கலாம் அவர்கள் கூறிய கருத்து ஒன்றும் என் கவனத்தை ஈர்த்தது..
கூடங்குளம் குறித்து முடிவு செய்ய பத்து நாட்கள் அவகாசம் கேட்டு இருக்கிறார் அணு விஞ்ஞானி...
அனைத்து அணு உலைகளையும் பார்த்த பிறகே அவரால் பதில் சொல்ல முடியும் என்று பத்து நாட்கள் அவகாசம் கேட்டு இருக்கிறார்...
ஒரு அணு விஞ்ஞானிக்கே இது குறித்து பத்து நாட்கள் அவகாசம் தேவை படுகிறது.. ஒரு சாதாரண மனிதனாய் என் கவலை எல்லாம் நம் சந்ததியர் நிலை என்ன என்பதே...
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=332615

மேலும் முனைவர் சிவாஜி ராவ் கேட்கும் கேள்வியையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்...
அநேகமாக இந்த பதிவுக்கு எதிர் கருத்து போட வரும் உள்ளங்கள், இதையும் படித்து விட்டு, அப்புறம் கருத்திடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்..
http://www.newsreporter.in/dr-apj-abdul-kalams-statements-on-nuclear-power-improper-prof-shivji-rao

இத்தனை நாட்கள் அணு சக்திக்கு ஆதரவாய் பேசிய அப்துல் கலாம் இன்று திடீர் என்று பத்து நாட்கள் அவகாசம் கேட்க காரணம் பல்வேறு துறையின் சிறந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்காய் இருக்கும் என்பது என் சந்தேகம்...
http://www.dnaindia.com/india/report_experts-file-petition-urging-sc-to-stay-contracts-for-nuclear-plants_1598945

தொழில் நுட்ப அறிவை சார்ந்த பல்வேறு அறிஞர்களே கேள்விகளை எழுப்பி கொண்டிருக்கும் பொழுது சாமானிய மக்களாய் என் கேள்வி ஒன்றே ஒன்று தான் நம் சந்ததியர் நிலை என்ன என்பதே...

கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவு தரும் மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க, இன்று ஒரு நாள் தேர்தலில் பங்கேற்க போராட்டம் தற்காலிகமாய் நிறுத்திக் கொள்ளப் பட்டது என்று முடிவு எடுத்துள்ளார்கள் என்று கூடல் பாலா நேற்று தொலைபேசியில் தெரிவித்தார்...

மனோ அண்ணன் சொல்லியது போல், "நான் போராட்ட களத்தில் உங்களுடன் இல்லை என்பதை நினைத்து வருந்துகிறேன், அல்லாமலும் எனது மனம் முழுவதும் அங்கேயே இருக்கிறது." http://nanjilmano.blogspot.com/2011/10/blog-post_15.html#ixzz1b17d8SX8
நானும் அங்கு நேரடியாய் இருக்க முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்..

மக்களின் போராட்டத்தை கலவரமாக மாற்ற முயற்சி செய்யும் அத்தனை முயற்சிகளும் தோற்று போய் உள்ளதாக தெரிகிறது..
பல்வேறு தரப்பினரின் கவனத்தை கவர்ந்து வரலாற்றில் இடம் பெற்ற அனைத்து போராட்டக் காரர்களுக்கும் இன்குலாப் ஜிந்தாபாத் தவிர வேறு எதுவும் சொல்ல தெரியவில்லை எனக்கு...