politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

25.10.11

மால்குடி சித்தன்

ஆன்மா, ஆவி, உயிர்...

பெரும்பாலும் மேற்கூறியவற்றை பற்றி பொதுவான கருத்து கீழே கொடுக்கப் பட்டுள்ளது

ஆத்மா பரமாத்மாவுடன் கலந்து விடுகிறது...

உயிர் இதயத்தில் இருக்கிறது, அதனால் தான் நாம் இதயம் இருக்கும் இடத்தை நான் என்று சொல்லும் பொழுது சுட்டுகிறோம்

ஆவி உலவியது, இறந்த உயிர் ஆவியாக திரிகிறது என்றும் செய்திகள் வருகிறது...

என் கேள்வி என்ன என்றால்,

நாம் ஒரு செல் உயிர் கிடையாது, பல செல் உயிர்...
ஆகையால் நம் ஒவ்வொரு செல்லும் ஒவ்வொரு உயிராகவே இயங்குகிறது..

பிராணவாயுவை ஒவ்வொரு பகுதிக்கும் கடத்தி செல்லும் சிவப்பு அணுக்களின் வாழ்நாள் நூறு முதல் நூற்றி இருபது நாட்கள்..

இறந்த மனிதனின் கண்களை நான்கு மணி நேரத்துக்குள் எடுத்து வைத்தால், அந்த கண்கள் உயிர் இழப்பதில்லை...

ஆக உயிர் எங்கு உள்ளது என்ற ஒரே சர்ச்சையில் தான் ஆத்மா, உயிர், ஆவி ஆகியவை இன்னும் உலகில் உலவிக் கொண்டிருக்கிறது..

என் கேள்வி என்ன என்றால்,
மனிதனின் உயிர் அவன் உடலில் எங்கோ இருக்கிறது என்றால் செடி கொடிகளின் உயிர் எங்கு உள்ளது?

ஆன்மா, ஆவி, உயிர்...
இவை மிகவும் சர்ச்சையான விஷயங்கள்...
இவற்றை பற்றி விரிவாக வேறு ஒரு பதிவில் அலசியிருக்கிறேன்... [புழிந்து, காயப்போடவில்லை]

http://suryajeeva.blogspot.com/2010/11/blog-post.html

மாற்றுக் கருத்துக்கள் இந்த விஷயத்தில் பலருக்கும் இருக்கும், ஆகையால் பதிவு செய்யுங்கள்... என்னை கூர் தீட்டிக் கொள்ள அவை என்றும் வரவேற்க்கப் படுகின்றன, விவாதமோ? விதண்டாவாதமோ தவிர்த்து விடுவோம்...