politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

29.10.11

ஷாக்கடிக்குது...

இந்த மாத ஆரம்பத்தில் தமிழ் நாடு  முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன் அறிவிப்பு இல்லாத மின் வெட்டை கண்டது...

அனைவரும் கேள்வி எழுப்பிய பொழுது அரசிடம் இருந்து நமக்கு வந்த பதில், ஆந்த்ராவில் தெலுங்கானா போராட்டம் நடந்து கொண்டு இருந்ததால் அங்கிருந்து வர வேண்டிய நிலக்கரி வருகை தடை பட்டு, மின் உற்பத்தி தடை பட்டதாக அறிவிப்பு வெளியாகியது...

கூடங்குளம் போராட்டத்தை குறித்து தவறான சமிங்க்ஜைகளை மக்களுக்கு கொண்டு செல்லவே மின் தடை உருவாக்கப் பட்டுள்ளதோ என்ற சந்தேகம் நேற்று வெளியான ஒரு செய்தியால் எழுந்து நிற்கிறது...

டெக்கான் குரோனிகள் நாளிதழில் வந்த செய்தி, இன்னும் நான்கு நாட்களுக்கான நிலக்கரி தான் இருப்பு இருப்பதாகவும், வழக்கமாய் இருப்பு இருக்கும் முப்பது நாட்களுக்கான நிலக்கரி இல்லை என்றும் கூறி உள்ளனர்...

அப்படி என்றால் இத்தனை நாட்களாய் முப்பது நாளுக்கு தேவையான நிலக்கரியை, கை வசம் வைத்து கொண்டு தான் நிலக்கரி தட்டுப்பாடு உள்ளதாக கூறி இருக்கின்றனர் என்பது வெளிச்சத்திற்கு வருகிறது...
பொய்கள் சொல்வதை விட, பொய்களை சொல்லாமல் இருப்பது பெரிது, ஏனெனில் என்ன என்ன பொய்கள் சொல்லி இருக்கிறோம் என்பதை சாகும் வரை நினைவில் வைத்து இருக்க வேண்டிய அவசியம் வருவதை தவிர்க்கலாம் என்று சும்மாவா சொன்னார்கள்....