
உண்மையை ஒத்துக் கொள்ளவும் ஒரு தைரியம் வேணும்..
நம்ம ஷாருக் போல எல்லா நடிகர்களும் இருந்து விட்டால், நம்ம நாடு என்னிக்கோ ஊழல் இல்லாத நாடா ஆகியிருக்கும்...
ரசிகர்கள் தான் என் உயிர்னு கேட் க்கு வெளியவே நிக்க வச்சுட்டு பால்கனியிலிருந்து கை காட்டும் நடிகர்கள் மத்தியில் இவ்வளவு வெட்ட வெளிச்சமா, நான் ஒரு சுயநலவாதி.. எனக்கு யாரை பத்தியும் கவலை இல்ல, எனக்கு என்னை பத்தி தான் கவலை.. காசு தான் முக்கியம், எவன் எவனை கொள்ளை அடிச்சா எனக்கு என்ன? என்று தைரியமாக சொல்லியிருக்கிறார்...
இவர் இப்படி கூறியிருப்பது எந்த அடிப்படையில்
ஒன்று மக்கள் மேல் இவர் வைத்திருக்கும் நம்பிக்கை...
அல்லது அடிச்ச மப்பு தெளியலையோ என்னவோ...
எல்லோரும் இதே மாதிரி வந்து உண்மையை ஒத்துக்குங்கப்பா, அதுவே நீங்க ஊழலுக்கு எதிரா செயல் படும் செயல் தான்...
ஊழலை ஒழிப்பதற்கு இந்த உதவியாவது செய்யக் கூடாதா..?
http://www.hindustantimes.com/SRK-Won-t-back-Ramdev-his-agitation-politically-motivated/Article1-704896.aspx