politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

10.6.11

அது சரி... எது தவறு...


எது சரி என்பது எப்பொழுதுமே குழப்பமான விஷயமே...
நம்ம அறிவுமதி சாரை பேச சொன்னா நல்லா குழப்பி நமக்கு தெளிவா புரிய வச்சிடுவார்...
சமச்சீர் புத்தகங்கள் தி.மு.க அரசின் பிரச்சார களமாகி இருக்கிறது, என்பது தமிழகத்தில், அண்ணா தி. மு. க அரசின் விளக்கமாகியிருக்கிறது...
வரலாறு திரிக்கப் பட்டுள்ளதாக கேரளா முன்னாள் இடது சாரி அரசாங்கத்தின் மேல் கிறிஸ்து தேவாலயங்களின் குற்ற சாட்டாகியிருக்கிறது...
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கை வைத்துள்ளனர்..
ஒவ்வொரு கொள்கையும் இரண்டே இரண்டு பிரிவுகளில் அடங்கி விடுகிறது...
ஒன்று முதலாளித்துவம்
இரண்டாவது பொதுவுடைமை...
தி.மு.க வும் அண்ணா தி.மு.க வும் கூட இனைய வாய்ப்புண்டு (ஏனென்றால் இருவர் கொள்கையும் ஒன்றே) ஆனால் முதலாளித்துவமும் பொதுவுடமையும் என்றும் இணையப் போவதில்லை.. ஆனால் ஒன்று உண்மை மறுக்க முடியாதது...
கிறிஸ்து மதம் crusaders என்ற பெயரில் எண்ணற்ற கொலைகளை செய்துள்ளது அனைவருக்கும் தெரிந்ததே..

[தெரியாதவர்களுக்கு] http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

இப்படி அனைத்து மதங்களும் தங்களை வளர்த்துக் கொள்ள எண்ணற்ற அநியாயங்களை வரலாற்று பக்கங்களில் இரத்தத்தால் எழுதி வைத்துள்ளதை மறைக்க முடியுமே தவிர மறுக்க முடியாது... தமிழன் இந்து மதம் என்ற ஒரே காரணத்தினாலேயே புத்த மதம் இலங்கையில் இனப்படுகொலையில் வரலாற்றில் எழுதி இருக்கிறார்கள்...

மதங்களை ஒழித்து விட்டு மனிதத்தை தூக்கி பிடிக்கும் பொழுது, இந்த அட்டை பூச்சிகள் காணாமல் போய் விடுவார்கள் என்பது உறுதி..

http://www.ndtv.com/video/player/news/kerala-church-accuses-left-of-distorting-history/201358