
12 கோடி ரூபாய் பணம், 100 கிலோ தங்கம், 300 கிலோ வெள்ளி, இன்னும் பல மர்மங்கள் என்று பாபாவின் அறையை திறந்தவுடன் வெளியே வந்து விழுந்தது... டிரஸ்ட் தொடர்பான பணம் என்பது வரவு வைக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி இந்த பணம் முழுவதும் வரவில் வைக்கப் பட்டுளதா என்று யாரும் கேட்டார்களா இல்லையா என்பது தெரியவில்லை...
ஆனால் இந்த பணம் முழுவதும் கணக்கில் வரவில்லை என்பது, இன்று அனந்தபூர் மாவட்டத்தில் சிக்கிய 35 லட்சம் காட்டிக் கொடுத்திருக்கிறது...
கணக்கில் வராமல் வைக்கப் பட்டதால் தான் இவ்வளவு தொகை வெளியே சென்றிருக்கிறது...
கணக்கில் வரவைக்கப் பட்ட பணமாக இருந்திருந்தால் இதை எடுக்கும் தைரியம் அசாதாரமானவர்களையே சாரும்.
இப்பொழுது அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன என்றால் எவ்வளவு பணம் வெளியே எடுத்து செல்லப் பட்டிருக்கிறது என்று கண்டுபிடிப்பதில்லை...
மாறாக ஏன் இவ்வளவு பணம் கணக்கில் வராமல் இருக்கிறது?
யார் யாரிடம் இருந்து இவ்வளவு பணம் வந்திருக்கிறது என்றும்?
இது எல்லாம் கருப்பு பணமா என்றும் ஆராய வேண்டும்...
நடக்குமா..
சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை தெரிந்து வைத்திருப்பவர்கள் டிரஸ்ட் இல் அங்கம் வகிக்கும் பொழுது இது நடக்குமா என்பது சந்தேகமே...
மாறாக மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் போதும்...
மாற்றம் தானாய் வரும்...
http://www.ndtv.com/article/cities/cash-worth-rs-35-lakh-seized-from-sathya-sai-trust-s-vehicle-113350