
அடிச்ச மப்பு தெளியவே கூடாதுன்னா எந்த சரக்கு அடிக்கணும்?
முக்கால் வாசி குடி மகன்களின் கவலை இதுவாக தான் இருக்கும்...
சரக்கு எல்லாம் அடிக்க வேணாம், ஒரு கட்சியிலே சேர்ந்து எப்படியாவது பெரிய பதவிய பிடிச்சு மந்திரி அமைச்சர்னு உக்கார்ந்திட்ட அப்ப ஏறும் பாரு ஒரு போதை அது இறங்கவே இறங்காது...
யார் சொன்னது அப்படீண்றீன்களா?
நம்ம முன்னாள் அமைச்சர் சொன்ன பதிலை கேட்டா யாருக்குமே சந்தேகம் வராது...
அப்படி என்னங்க சொல்லிட்டாரு...?
ராம்தேவிடம் எங்கள் கட்சிக்கு எந்த பயமும் இல்லை, அப்படி பயம் இருந்தால் அவர் இந்நேரம் கம்பி எண்ணி கிட்டு இருப்பார்.. அப்படின்னு சொல்லியிருக்கிறார்...
இங்க என் சந்தேகம் என்னன்னா,
கம்பி என்ற அளவுக்கு அவர் அப்படி எண்ண தப்பு செஞ்சார்?
அப்படி தப்பு செய்யலைனா,
தப்பே செய்யாத ஒருவரை எப்படி உள்ளே வைப்பீங்க?
இப்ப சொல்லுங்க, மப்பு தெளிஞ்சிடுச்சா...
உங்களுக்கும் மப்பு ஏறனும்னா, கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தியை படிங்க,
http://truthdive.com/2011/06/03/baba-ramdev-is-a-businessman-digvijay-singh.html