
இந்த வாசகத்தை காந்தி சொன்னதாகவும் சொல்வார்கள், . அதை பற்றிய விவாதம் இது அல்ல..
சுதந்திரம் வாங்கியதிலிருந்து இன்று வரை ஆட்சி செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசு நான் ஏழைகளை காப்பாற்றவே ஆட்சி செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறி வருகிறார்கள்...
ஏழைகள் பணக்காரர்கள் ஆகி விட்டால் அவர்களை காப்பாற்ற காங்கிரஸ் அரசால் முடியாது என்பதால், ஏழைகளை மேலும் ஏழைகளாக்கி இவர்கள் அவர்களை காப்பாற்றி கொண்டிருக்கிறார்கள்...
இன்று நமது பிரதமர் நான் செயலற்றவன் அல்ல என்றும், எங்கள் அரசு செய்த செயலுக்கு கட்சியில் இருந்து எந்த தடையும் வரவில்லை என்றும் கூறி இருக்கிறார்...
http://www.dnaindia.com/india/report_i-am-not-helpless-says-manmohan-singh_1560498
நீங்கள் செயலற்றவர் இல்லை செயல்படவும் இல்லை..
கட்சியின் கொள்கைக்கு முரணாக அரசு செயல் பட்டால் தானே கட்சியிடம் இருந்து தடை வரும், நீங்கள் தான் செயல் படவே இல்லையே, அப்புறம் எப்படி தடை வரும்...
ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது,
உங்கள் ஆட்சியின் சாதனைகள் என்று முதல் வருட இறுதியில் சொன்னது,
பணவீக்கத்தை [விலை வாசி உயர்வு] கட்டு படுத்தியது
gdp சதவிகிதத்தை தக்க வைத்தது...
சரி வேறு ஏதாவது சாதனைகள் செய்திருக்கிறார்களா பார்ப்போம், என்று தமிழ் மாநில காங்கிரஸ் வலை தளத்தில் நுழைந்து பார்த்தால்,
Click Here download Achievements of UPA Govt என்று ஒரு வாசகம்...
சரி என்று இணைப்பை சொடுக்கினால்...
not found... என்று ஆங்கிலத்தில் என்னை பார்த்து கூறுகிறது...
சரி நாளைக்காவது கண்டுபிடித்து விட்டார்களா என்று பார்ப்போம்...
http://www.tncc.org.in/index.php?option=com_content&view=article&id=70&Itemid=57&lang=en
உள்கட்சி பூசலோ...