
கட்சியை வளர்க்க, பறக்கிறார், ஓடுகிறார், நடக்கிறார் இன்னும் என்ன என்னவோ செய்கிறார்... ஆனால் அவர் எதிர்பார்க்கும் முடிவை தான் அவரால் காண முடியவில்லை...
அவர் ரொம்ப கஷ்டப் படவேண்டியதே இல்லை..
குறைந்த பட்சம் அவர் தாத்தாவின் பொருளாதார கொள்கையை கடை பிடித்தாலே போதும்..
அதை விட்டு விட்டு மாநில அரசியலில் கவனம் செலுத்துவதில் அக்கறை கொள்கிறார்..
உத்தர பிரதேஷிலும், தமிழ் நாட்டிலும் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, இவர்கள் ஆளும் மத்திய அரசை வைத்து கொண்டே ஏதாவது உருப்படியான காரியம் செய்தாலே, உத்தர பிரதேசத்திலும் தமிழ் நாடும் காங்கிரஸ் கையில் அடக்க மாகும்...
வான வேடிக்கை காட்டி குஷி படுத்துவதை விட்டு விட்டு பசித்த வயிறுக்கு சோறு போடுங்கள், விவசாயத்தின் வளர்ச்சிக்கு பாடு படுங்கள்...
அதை விட்டு விட்டு முக்கியமான பிரச்சினைகள் முளைக்கும் போது எல்லாம் கண்ணா மூச்சி ஆடுவது சின்ன புள்ளை தனமா இருக்கு... சொல்லி புட்டேன்..