
நம்ம மேற்கு வங்க முதலமைச்சர் புரிந்து கொண்டு தான் பேசுறாங்களா, இல்லைனா நம்ம ஊடகங்களுக்கு வங்காள மொழி புரியாமல் எழுதுகிறார்களா என்று தெரியவில்லை...
பிரதம மந்திரி ஒருவரை மட்டும் சேர்ப்பதால் ஊழலை ஒழித்து விட முடியாது என்னும் அர்த்தத்தில் பேசியதாக இன்று செய்தி வெளியாகியுள்ளது...
பிரதம மந்திரி ஒருவரை மட்டும் சேர்க்காமல் விட்டால் ஊழலை ஒழிக்க முடியாது என்று தான் லோக் பால் மசோதா [அண்ணா] குழுவினர் பேசியுள்ளனர்...
சிங்கூர் கிராமத்தில் மக்களிடம் இருந்து பறிக்கப் பட்ட 400 ஏக்கர் நிலத்தை சொன்ன படியே திரும்ப வாங்கி விட்டீர்கள், அதே மாதிரி டாடா நிறுவனத்திற்கும் இடது சாரி அரசாங்கத்திற்கும் நடுவில் போடப்பட்ட ஒப்பந்தத்தை முதல் வேலையாக வெளியே விடுவேன்னு சொன்னீங்க... அதை பத்தி சொன்னீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்...
http://www.thehindu.com/news/national/article2123510.ece