
நம் நாட்டில் அனைத்து இயக்கங்களிலும், யார் தவறு செய்தாலும் அதற்கு தலைவர் அல்லது செயலாளர், இவர்களுக்கு யாருக்கு அதிகாரம் அதிகமோ அவர்கள் தான் பொறுப்பு..
அதே போல் தான் விளையாட்டிலும், அணித்தலைவர் அல்லது அணிப்பயிர்ச்சியாளர் தான் பொறுப்பு...
அது என்னவோ நாட்டை ஆள்பவர்களுக்கு இந்த விதி பொருந்த கூடாதாம்...
அனைத்து ஊழல்களுக்கும், நாட்டை ஆளும் பிரதமர் தான் பொறுப்பாக முடியும். ஆனா அவரோ எனக்கு எதுவுமே தெரியாது என்று சாதிக்க முடியும்...
திக் விஜய் சிங்க் அவர்கள் அண்ணாவை கேட்டிருக்கும் கேள்விக்கு பதில்...
உங்கள் குழுவில் இருக்கும் ஐந்து பேர் தான் புத்திசாலி மற்றவர்கள் அனைவரும் முட்டாளா?
யார் சொன்னது, அண்ணா வின் குழுவில் இருப்பவர்களை விட அவர்கள் அதி புத்திசாலியாய் இருக்கிறார்கள். கழுவும் மீனில் நழுவும் மீனாய், நழுவிக் கொண்டே போவதால் அவர்களை அடக்க மிரட்டுகிறார்கள்.
பிரதமரை லோக் பால் வளையத்திற்குள் கொண்டு வரலாமா வேண்டாமா என்று நாடே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, நாட்டை ஆட்சி செய்யும் காங்கிரஸ் இதை பற்றி இன்னும் முடிவெடுக்க வில்லை என்பது இவர்கள் ஆட்சி செய்யும் லட்சணத்தை விளக்குகிறது.
இன்னும் யாருடைய கட்டளைக்காக காத்திருக்கிறார்களோ?
http://www.indianexpress.com/news/are-your-five-wise-and-the-rest-fools-cong-asks-anna/805044/