politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

16.6.11

அக்கரைக்கு இக்கரை பச்சை...


இந்த பழமொழி எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் நீர்த்து போகாது...
அது என்னவோ எங்கு பொருத்தினாலும் பொருந்திக் கொள்கிறது...
நம்ம பக்கத்து வீட்டு பிரச்சினை எல்லாம் பல பேருக்கு ஞாபகமே இருக்காது. ஆனால் உலக நியாயம் பேசிக் கொண்டிருப்பவர்கள் பட்டியலில் நானும் இருக்கிறேன் என்பது கொஞ்சம் வெக்கப்பட வேண்டி தான் இருக்கிறது...
இலங்கையில் முள்வேலிகளில் அடைபட்டிருக்கும் தமிழனின் நிலையை பார்க்க பல குழுக்கள் சென்றன, அப்படி சென்ற இந்து நாளிதழ் குழுவும், முற்போக்கு எழுத்தாளர்கள் குழுவும், சொன்னது கீற்று இனைய தளத்தில் பலத்த விவாதங்களை பல முறை எழுப்பி இருந்தது...
தமிழின துரோகி என்றும்
பார்ப்பனிய குசும்பு என்றும் அவர்களை சாடியிருந்தனர்...
அப்படி எண்ண சொன்னார்கள் அவர்கள்...
தமிழகத்தில் அகதிகளாய் வாழும் தமிழர்களை விடவும் முள்வேலிகளில் அடைபட்டிருக்கும் தமிழர்கள் இழிவான நிலையில் இல்லை என்று சொல்லியிருந்தார்கள்,
இங்கு இருக்கும் தமிழர்களின் நிலை குறித்து கேள்வி எழும் பொழுதெல்லாம் ஆ ஊ என்று ஊளையிடும் ஊடகங்கள் சில நாட்களில் மௌனம் சாதிப்பது வாடிக்கையாகிவிட்டது...
இலங்கை தமிழர்களை காப்பேன், தமிழகத்தை ஒளி மயமாக்குவேன் என்று கூறி ஆட்சியில் அமர்ந்து ஒரு மாதங்கள் ஆகிவிட்டன, ஆனால் குழப்பங்களும் கூச்சல்களும் தான் அதிகமாகி இருக்கிறது...

இத்தனை நாளாய் சீமான் எங்கு போயிருந்தார்?

சும்மா வாய் சவடால் விடாமல் தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்...
மலையை சுமக்க முயற்சி செய்வதை விட்டு விட்டு சிறு சிறு பாறைகளாய் அந்த மலையை பெயர்த்து எடுப்போம்...
அறிக்கை விட்டு விளம்பரம் தேடாமல் ஏதாவது செய்யுங்கள் அதுவே விளம்பரமாகி விடும்...

இன்னும் வைகோவும் நெடுமாறனும் வாய் திறக்கவில்லை, அவர்களுக்கு இது பற்றி இன்னும் தெரியவில்லையோ என்னவோ.. யாராவது அவங்களிடமும் சொல்லுங்களேன்...

எதோ நம்மளால் முடிஞ்சது...

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1106/16/1110616031_1.htm