
ஊழலை எதிர்த்து போராட்டங்கள் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது...
வலைப்பக்கங்கள் முழுவதும், நாளிதழ்களிழும், எங்கு திரும்பினாலும் ஊடகங்களில் பார்வையில் இந்த போராட்டங்களே நிறைந்து உள்ளது... ஊழலின் ஆணிவேரான பெரிய பணமுதலைகளிடமும், அவர்களின் அடிமையான அரசியல்வாதிகளிடமும் இதற்கான விடையை தேடுவது வீண் வேலை...
நம் நாட்டில் ஏற்கனவே ஐந்தாவது தூண் என்னும் ஒரு அமைப்பு ஊழலை எதிர்த்து ஒரு புரட்சியே செய்து கொண்டிருக்கிறது...
ஊழல் வேண்டாமா?
நம் நாடு சுத்தம் ஆக வேண்டுமா?
அண்ணா வுக்கு ஆதரவு கொடுங்கள்...
நம் நாடு நலம் பெற
பாபாவுக்கு ஆதரவு கொடுங்கள் என்று தினம் ஒரு குறுஞ்செய்தி வந்து கொண்டு இருக்கிறது...
உண்மையாகவே உங்களுக்கு லஞ்சத்தை ஒழிக்க ஆதரவு தர வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரே ஒரு கடினமான வேலை தான்...
எந்த காரியத்துக்கும் தெரிந்தோ தெரியாமலோ லஞ்சம் கொடுக்காதீர்கள்...
அதை விட்டு விட்டு missed call கொடுத்தேன், பாபாவுக்கு ஜே, அண்ணாவுக்கு ஒ போடு என்று செம்மறி ஆட்டு மந்தையாக திரியாதீர்கள்...
http://zerocurrency.org/