மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அவர்கள் அனைவரும் இடது பக்கம் செல்ல வேண்டும் என்று மார்க்சும் எங்கல்சும் வரை அறுத்தனர்...
அதனால் தான் அமெரிக்காவில் ரோட்டில் கூட வலது பக்கம் செல்கின்றனர்..
இடது சாரிகளின் வீழ்ச்சிக்கு எண்ண கரணம் என்று ஆராய்ச்சி செய்ய போகிறார்களாம் கல்கத்தாவில்...
இதெல்லாம் காரணம் என்று யூகம் வேறு...
௧. மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது, கரத் செய்த மிக பெரிய தவறாம்...
௨. மக்களிடம் தொடர்பு வைத்ததுக் கொள்ளாதது என்று முடிவு செய்யலாம் என்றும் முடிவாம்..
௩. கட்சியின் செயல்பாடுகளில் தோய்வு...
எனது விசாரணை..
௧. இடது சாரிகளின் கட்சியில் தனி மனித முடிவு ஏற்றுக் கொள்ளப் படுவது உண்டா? அப்படி உண்டு என்றால் அது இடது சாரி கட்சியா?
௨. இடது சாரி சிந்தனைகளை ஊழியர்களிடம் எவ்வளவு தூரம் நீங்கள் விதைத்து இருக்கிறீர்கள்?
௩. இடது சாரி கட்சியில் இருக்கும் அனைவரும் இடது சாரிகளா?
நம் நாட்டு தேர்தல் என்பதே ஒரு ஜனநாயக முறை அல்ல என்று கூறும் கட்சியினர், தேர்தல் என்பதே ஒரு போலி ஜனநாயகம் என்று கூறும் கட்சியினரே தேர்தல் தோல்விக்கு விடை தேடுவது என்பது, கை புண்ணுக்கு கண்ணாடி தேடுவது போல் ஆகும்...
அப்படி அவர்கள் உண்மையாகவே விடைகள் தேடுகிறார்கள் என்றால் அவர்கள் கொள்கையிலே அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்...
இவர்களின் பின்னால் நாம் செல்வதை விட, இடது சாரி பாதையை சரியாக கண்டுபிடித்து அனைவரும் பயணிப்போம் என்பதை தவிர சொல்வதற்கு இங்கு வேறு எதுவும் இல்லை...
http://www.telegraphindia.com/1110605/jsp/bengal/story_14073486.jsp
இவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று இவர்களின் pd நாழிதளில் பார்ப்போம்...