
நாட்டு மக்களை காப்பாற்றும் இயந்திரம், மக்களுக்காக உயிரை கொடுக்க தயாராகும் உள்ளங்கள், பணியிலும் மழையிலும் போராடும் வீரர்கள்...
ராணுவத்தை குறித்த நமது சிறு வயது பாட புத்தகங்களில் படித்த பக்கங்கள், கண் முன்னே கரைந்து போகிறது...
ராணுவ ஆயுதங்கள் கள்ள சந்தையில் விற்பனை..
ராணுவ குடியிருப்பு கட்டுவதில் ஊழல் [ ஆதர்ஷ்]
அசாமில் ராணுவ அதிகாரிகள் யாரை வேண்டும் என்றாலும் கற்பழிக்கலாம் என்னும் அரசு சட்டம்...
சாதாரண மக்களை குருவியை போல் சுட்டு தள்ள உரிமை...
கடமை கண்ணியம் கட்டுப்பாடு இவை அனைத்தும் இல்லாத ஒரு இயந்திரம் எவ்வளவு கொடுமையானது என்பதை கிழக்கு இந்திய மாநிலங்களும், ஜம்மு காஷ்மீரும் ஏற்கனவே கண்டவை தான்...
வேலை வாய்ப்பு அறவே அற்று போகும் பொழுது தீவிரவாதம் முளை விடுகிறது, வேலை வாய்ப்பை ஏற்படுத்தாமல், பிறர் மேல் நாம் குற்றம் சொல்லி கொண்டிருப்பதால் நமது ஆபத்து நீங்கி விடாது...
ஒரு சிறுவனை சுட்டு கொன்றதை ஏழு நாட்கள் கழித்து ஒத்துக் கொள்ளும் மன நிலையில் உள்ள ராணுவம், சீர்படுத்தப் படவேண்டும்...
http://www.hindustantimes.com/Ex-army-man-confesses-to-killing-Dilshan-CB-CID/Article1-719443.aspx#disqus_thread
இந்தியாவை இந்தியாவாக ஆள வேண்டிய மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்தையும் தனி தனியாக பார்ப்பதால் வரும் நிலை இது...
ஒவ்வொரு மாநிலத்தையும் தனி தனியாக பார்க்கும் அரசு, தேசிய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதில் எந்த ஐயப் பாடும் இல்லை...
http://articles.economictimes.indiatimes.com/2011-06-17/news/29669898_1_crpf-personnel-crpf-men-fake-encounter
எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை
எது நடக்கிறதோ அதுவும் நன்றாக நடக்கவில்லை
எது நடக்க போகிறதோ அதுவாவது நன்றாக நடக்குமா?