politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

7.7.11

ஈ.சி செய்றவங்களுக்கு கஷ்டம்...


இந்த மாதம் முதல் நாள் ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கம் இந்நேரம் அநேகமாக நீர்த்து போய் விட்டது என்று நினைக்கிறேன்...
போராட்டம் செய்யும் அலைபேசி ரீசார்ஜ் வியாபாரிகள் ஒரு அணியாக ஒற்றுமையாய் திரண்டு இல்லாதது முதல் தவறு..
அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வேலையை செய்யாமலே போராட்டம் என்று அரை கூவல் விடுத்து இயக்கத்தை கொண்டு செல்வது இரண்டாவது தவறு..
இதே பிழைப்பாய் இருக்கும் வியாபாரிகளின் அன்றாட வருமானத்தை பற்றி எண்ணி பார்க்காதது மூன்றாவது தவறு...

தவறுகளை திருத்திக் கொள்ளலாம் என்னும் அடிப்படையில்...
மீண்டும் தவறு இழைக்காமல் இருக்க, தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு துணை போகாமல், நமது அரசு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு துணை சென்றால் மக்களுக்கும் உதவிகரமாய் இருக்கும், மற்றும் வியாபாரிகளுக்கும் உதவிகரமாய் இருக்கும்...
இதை செயல் படுத்த வியாபாரிகள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான், புறப்பட்ட கோப தீயை அனைத்து விடாமல் உடனடியாக ரீசார்ஜ் செய்ய வரும் அனைத்து மக்களிடமும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு மாற்றி கொள்ளுமாறு எடுத்து உரையுங்கள்...
உங்கள் முதுகில் குத்தும், குத்தக் காத்திருக்கும் அனைத்து தனியார் நிறுவனங்களையும் புறக்கணிப்போம்,
போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம்...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=656729&disdate=6/30/2011&advt=2