எதையாவது படிக்கும் போது அதை சந்தேகத்தோடு அணுகி, அனைத்து சந்தேகங்களையும் களைந்து கொண்ட பின்பு அதை வாழ்க்கை நடைமுறையில் பயன் படுத்த வேண்டும் என்ற அருமையான தத்துவம் கொண்டது இந்த குறள்.. அந்த குறள் படி தான் நான் நடக்கிறேன் என்று மனசாட்சியுடன் பதில் அளிப்பவர்கள் ஆயிரம் பேரில் ஒருவராக தான் இருக்க முடியும் என்பது என் எண்ணம்...

ஆகையால் மாணவர்கள் அனைவரும் மதம் சார்ந்த அனைத்து புத்தகங்களையும் படித்து சந்தேகத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், கேள்வி கேளுங்கள், கண்டிப்பாக கேள்விக்கு பதில் கிடைக்காது...
உங்கள் மதம் சார்ந்த கேள்விகளுக்கான பதில்களை பெற பகத் சிங்கின் புத்தகங்களை படியுங்கள், அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்...
ஒரு திரைப்படத்தில் வரும் வசனம்,

அவருக்கு நம் பதில்,
கடவுள் என்று ஒருவர் பின்னால் ஓடுவதால் தான் இவ்வளவு பிரச்சினைகளும், பிரச்சினைகள் உச்ச கட்டத்தை நெருங்கும் பொழுது, மக்களே தானாக கடவுளை புறக்கணிப்பார்கள்...
பழைய கூட்டம் நிறைந்த கோவில்களில் கூட்டம் நிரந்தரமாகி உள்ளது...
இது மக்கள் பழைய கடவுளின் மேல் நம்பிக்கை இழந்து புதிய கடவுள் மேல் நம்பிக்கை வைப்பதையே காட்டுகிறது...
மக்கள் இன்னும் புரிந்து கொள்ளாதது ஒன்றே ஒன்று தான், ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்கள் தான் மாறிக் கொண்டிருக்கிறார்கள், காட்சிகள் அல்ல என்பதை தான்...
புரிந்து கொள்ளும் பொழுது விடிந்து இருக்கும்...