politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

8.7.11

நான்காவது தூண்...


அலை கற்றை ஊழல், எண்ணெய் படுக்கை ஊழல், இன்னும் இன்ன பிற ஊழலிலும், சம்பந்தப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களை நோக்கி யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை...
உச்ச நீதி மன்றமும், உளவுத்துறையும் அவர்கள் மேல் எந்த தவறையும் கண்டுபிடிக்க வில்லை...
ஊடகங்கள் எப்பொழுதாவது தான் அவர்களை பற்றி வரும் புகார்களை கூறுகிறார்கள்...
அதை தவிர வேறு எதையும் கண்டு பிடிக்க மறுக்கிறார்கள்...
பண முதலைகளின் தூண்டுதல் பேரில் அரசியல் வாதிகள் செய்யும் தவறுகளை கிழித்து தொங்க விடும் ஊடகங்கள், இந்த தனியார் நிறுவனங்களின் மேல் ஏனோ பாராமுகமாகவே உள்ளது...
அரசியல் வாதிகளை கண்ட மேனிக்கு திட்டி தீர்க்கும் அண்ணா ஹஜாரே கூட அவர்களை பற்றி வாய் திறக்க மாட்டேன் என்கிறார்...
அதனால் தாத்தாவுக்கு வந்த கோபத்தில் ஊடகத்தின் மேல் பாய்ந்து விட்டார்...
தப்பு செய்ததாக இவர் ஒத்து கொள்ள முடியாத நிலை...
தப்பு செய்ய தூண்டியவர்களை காட்டி கொடுக்க முடியாத பண்பு... [தமிழன் பண்பு????]
என்ன செய்வது என்று தெரியாமல், ஊடகங்கள் மேல் பாய்ந்து விட்டார்?
என்ன இவர் செய்த தவறு ஒன்றே ஒன்று தான், தமிழகத்தில் இருக்கும் ஊடகங்களில் கால் பங்குக்கு மேல் இவர் கையிலேயே இருக்கும் பொழுது இவர் ஏன் மற்றவர்கள் மேல் எரிந்து விழுகிறார் என்று தான் தெரியவில்லை...

துப்பறியும் ஊடகங்களே, குறைந்த பட்சம் நக்கீரனாவது இந்த ஊழல்களின் பின்னணியில் இருக்கும் பெரும் புள்ளிகளை பற்றி அவிழ்த்து விட கூடாதா?

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF&artid=443220&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

முதல் தூணின் அஸ்திவாரமே இந்த பெரிய புள்ளிகள் என்பதால், இந்த குழப்பம்...
ஆதாரம்: தோ.லெனின்.